search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "settlement"

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 3,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா், மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், கூடுதல் சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, நீதித் துறை நடுவா்கள் முருகேசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்து அதில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்கள் மீது விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 63 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மனுதாரர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    • மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
    • மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
    • துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பான 134 மனுக்க ளும், ஆக்கிரமிப்பு தொடர் பாக29 மனுக்களும்இ முதி யோர் உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 37 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 17 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறை களுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர் களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    • தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக தீா்வு காணப்பட்டு வருகிறது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் நடந்தது.

    முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி பகுதிகளில் 8 அமா்வுகளில் 251 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 24 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.

    தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

    • மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
    • 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.

    இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.
    • 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையிலும், வட்டாட்சியர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

    பெருமகளூர், குருவிக்க ரம்பை, ஆவணம், பேராவூரணி சரகத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளி களுக்கு ஆணை வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, வட்டத் துணை ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்ர மணியன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி, நில அளவையர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நீதிமன்றங்களில்‌ நிலுவையில்‌ இருக்கும்‌ வழக்குகள்‌ சமரச மையம்‌ மூலம்‌ தீர்த்துக்‌ கொள்ள முடியும்‌.
    • சமரச முறையிலும்‌ தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.

    இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.

    சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.

    இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    ×