search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணியில், ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு
    X

    பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    பேராவூரணியில், ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு

    • போக்குவரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.
    • 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையிலும், வட்டாட்சியர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

    பெருமகளூர், குருவிக்க ரம்பை, ஆவணம், பேராவூரணி சரகத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளி களுக்கு ஆணை வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, வட்டத் துணை ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்ர மணியன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி, நில அளவையர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×