search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pleadings"

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
    • துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பான 134 மனுக்க ளும், ஆக்கிரமிப்பு தொடர் பாக29 மனுக்களும்இ முதி யோர் உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 37 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 17 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறை களுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர் களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
    • இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை மேம்படுத்த 14 தாலுகாக்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

    இந்த முகாமை வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்தினர். அதில் புது ரேசன் கார்டு கேட்டு 7 பேர், முகவரி மாற்றம்-24 பேர், கார்டு வகை மாற்றம் -47 பேர், பிறந்த தேதி மாற்றம்-11 பேர், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் 64 பேர் உள்பட 331 பேரின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 327 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் 4 மனுக்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×