search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serial theft"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் தொடர் திருட்டு சம்பவங்க ளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் கைது செய்து பொதுமக்களிடம் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 10 பைக் பறிமுதல்
    • சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் குற்ற பிரிவு போலீசார் நேற்றிரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் போலீசாரை பார்த்து பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள கோட்டைகாலனி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது18), வல்லரசன் (24), அரவிந்தன் (20) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • 3 பேரையும் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது.

    மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
    • ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    ரூ.15 லட்சம் கொள்ளை

    புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.

    மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.

    2 தனிப்படைகள் அமைப்பு

    இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    • அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
    • மர்மநபர்கள் கதவை உடைத்து பணம், தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 57). தற்போது ஆலங்குளம் காந்தி நகரில் வசித்து வரும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    கதவு உடைப்பு

    நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவு உடைத்திருப்பது கண்டு அந்தோணிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் வந்து பார்த்த பின்னர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவம்

    அதே தெருவில் வசிப்பவர் பொன்சிவராமச்சந்திரன் (40). இவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டுக்கு சென்றுள்ளார். இதையும் நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்த புகார்களின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளத்தில் ஒரு மாதத்திற்கு முன் காமராஜர் நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்த திருடர்கள் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் மீண்டும் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    • 75 பவுன் நகை, 20 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது வீட்டின் அருகே நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 7-ந் தேதி இரவு நகைக்கடை உள்ள பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டினர். பின்னர் சரவணனின் நகை கடை பூட்டை விடுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.

    தொடர் திருட்டு

    நூதன முறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் சம்பந்தமாக ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    நேற்று ஆம்பூர் தாலுகா போலீசார் வெங்கிலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரவணன் கடையில் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதும் மேலும் அவர்கள் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆம்பூர் பெரியாங்குப்பம் கம்பர் தெருவை சேர்ந்த திவாகர் (24), கம்பி கொல்லையைச் சேர்ந்த கருணாகரன் (25), சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பெத்தலகேம் 8-வது தெருவை சேர்ந்த மெல்வின் (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 75 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், 20 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது.
    • தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்ட நாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றது. இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் உள்ள வர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    நேற்று இரவும் இந்த ஆலையில் திருட்டு சம்பவம் தொடர்ந்துள்ளது. இதில் இரும்பு பொருட்களை திருட மர்ம கும்பல் 3 மினி லாரிகளில் சுமார் 700 கிலோ இரும்பு பொருட்களை திருடி செல்ல முற்பட்டனர். இந்த திருட்டு குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. மேலும் போலீசார் சுமார் 20000 மதிப்புள்ள 700 கிலோ இரும்பு பொருட்கள் ஏற்றி இருந்த 3 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு தொகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இருவரும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள பலராமன், சீனிவாசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர்.
    • முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் உள்ளது. நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கோவில் முன்பக்கம் கேட் உடைந்து, உண்டியல் உடைந்து திறந்திருந்தது. இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் சப்-ஜெயில் சாலையில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் முன்பக்கம் கேட் உடைந்து உண்டியல் உடைத்து திறந்திருந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில் உண்டியல் உடைந்து திறந்திருந்தன. இதனை இன்று காலை பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உடைந்திருந்த உண்டியலை பார்வையிட்டனர். மேலும் மூன்று கோவிலில் சுமார் 21/2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மையப் பகுதியான மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் மற்றும் சப்ஜெயில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் மர்ம ஆசாமிகள் துணிந்து கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் திருட முயற்சித்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் களில் உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 சம்பவங்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகர பகுதியான கடலூர் நகரத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்து வரும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில் உண்டியலில் உடைத்து திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும், செல்வதற்கும் சற்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது மட்டும் இன்றி போலீசாரிடம் தொடர் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என கேட்டபோது, தமிழகத்தில் தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், புதிதாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து உரிய முறை யில் விசாரணை நடத்தி னால் மட்டுமே எதிர்வர் காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் முழுமையாக தடுக்க முடியும்.

    ஆனால் தற்போது சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கோ மற்றும் பிடித்து விசாரிப்பதற்கோ உரிய அனுமதி இல்லாததால் உடனுக்குடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என கூறினார். இதன் காரணமாக பொது மக்களின் அடிப்படை செயல்படுதல் முழுவதும் பாதிப்படைய நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீஸ் உயரதிகாரிகள் மேலோட்டமாக எந்த செயல்பாடுகளையும் யூகித்து உத்தரவு பிறப்பிக்காமல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

    • வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்

    கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.

    • தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது.
    • தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (50) இவரது மனைவி செல்வராணி வயது (45) இருவரும் கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 27 ந்தேதி புதன் கிழமை காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிறகு வேலை முடிந்து 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் சம்பவத்தன்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் போலீஸ் துணை சூப்பரெண்டு பார்த்திபன் மேற்பார்வையில், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கோபிநாத், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.நேற்று திங்கட்கிழமை காலையில் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர்,தெற்கு தெரு குமரன் ( எ ) முத்துக்குமாரன் (27) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (22) என்பது தெரிய வந்தது.

    அவர்களை கைது அவர்கள் ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மற்றும் தங்க நகைகள், செல்போன்களை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமரன் ( எ) முத்துக்குமரன் மற்ற சிலருடன் சேர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    ×