search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மக்கள் அச்சம்"

    • தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர்.
    • முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் உள்ளது. நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கோவில் முன்பக்கம் கேட் உடைந்து, உண்டியல் உடைந்து திறந்திருந்தது. இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் சப்-ஜெயில் சாலையில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் முன்பக்கம் கேட் உடைந்து உண்டியல் உடைத்து திறந்திருந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில் உண்டியல் உடைந்து திறந்திருந்தன. இதனை இன்று காலை பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உடைந்திருந்த உண்டியலை பார்வையிட்டனர். மேலும் மூன்று கோவிலில் சுமார் 21/2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மையப் பகுதியான மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் மற்றும் சப்ஜெயில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் மர்ம ஆசாமிகள் துணிந்து கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் திருட முயற்சித்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் களில் உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 சம்பவங்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகர பகுதியான கடலூர் நகரத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்து வரும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில் உண்டியலில் உடைத்து திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும், செல்வதற்கும் சற்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது மட்டும் இன்றி போலீசாரிடம் தொடர் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என கேட்டபோது, தமிழகத்தில் தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், புதிதாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து உரிய முறை யில் விசாரணை நடத்தி னால் மட்டுமே எதிர்வர் காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் முழுமையாக தடுக்க முடியும்.

    ஆனால் தற்போது சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கோ மற்றும் பிடித்து விசாரிப்பதற்கோ உரிய அனுமதி இல்லாததால் உடனுக்குடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என கூறினார். இதன் காரணமாக பொது மக்களின் அடிப்படை செயல்படுதல் முழுவதும் பாதிப்படைய நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீஸ் உயரதிகாரிகள் மேலோட்டமாக எந்த செயல்பாடுகளையும் யூகித்து உத்தரவு பிறப்பிக்காமல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

    ×