search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breaking door"

    • அந்தோணி வீட்டை பூட்டிவிட்டு புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
    • மர்மநபர்கள் கதவை உடைத்து பணம், தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 57). தற்போது ஆலங்குளம் காந்தி நகரில் வசித்து வரும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    கதவு உடைப்பு

    நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான புதுப்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவை கடப்பாரை மூலம் உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கதவு உடைத்திருப்பது கண்டு அந்தோணிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் வந்து பார்த்த பின்னர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவம்

    அதே தெருவில் வசிப்பவர் பொன்சிவராமச்சந்திரன் (40). இவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டுக்கு சென்றுள்ளார். இதையும் நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்த புகார்களின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளத்தில் ஒரு மாதத்திற்கு முன் காமராஜர் நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்த திருடர்கள் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றனர். இந்நிலையில் மீண்டும் திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    • கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் சுப்பிரமணி(வயது 35). இவர் கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.

    மீண்டும் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள பீரோவில் இருந்த சுமார் ஒரு பவுன் மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

    மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.32 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இதுதொடர்பாக சுப்பிரமணி தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×