என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்12 Sep 2022 9:28 AM GMT
- கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தேவர்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் சுப்பிரமணி(வயது 35). இவர் கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.
மீண்டும் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள பீரோவில் இருந்த சுமார் ஒரு பவுன் மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.
மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.32 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இதுதொடர்பாக சுப்பிரமணி தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X