search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
    X

    நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

    • கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் சுப்பிரமணி(வயது 35). இவர் கடந்த 6-ந்தேதி தனது குடும்பத்தினருடன் உடுமலைப்பேட்டையில் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.

    மீண்டும் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள பீரோவில் இருந்த சுமார் ஒரு பவுன் மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

    மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.32 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இதுதொடர்பாக சுப்பிரமணி தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×