search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seithunganallur"

    • கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்மற்றும் தலைவர் கிருஷ்ணன் அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
    • 3-வது நாளில் உழவியல் துறையின் மூலமாக ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம்- அட்மா திட்டத்தின் மூலம் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிற்சிக்காக ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் இருந்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்திற்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    இப்பயிற்சியின் முதல் நாளில் கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் ராமசுப்ரமணியன், சுகந்தி, கவிதா ஆகியோர் அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்களை பகுதி வாரியாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    இப்பயிற்சியின் மையத்தின் வாயிலாக அங்கக வேளாண்மையின் நோக்கம், முக்கியத்துவம், மண் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை, களை நிர்வாகம், அங்கக பொருட் களை சந்தைபடுத்துதல் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப கருத்துக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு கள மேற்பார்வை யிடுதல் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    2-வது நாளில் தோட்டக் கலைப்பயிர்களில் அங்கக வேளாண்மையின் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலைப் பயிர்களில் ஸ்ரீவைகுண்ட பகுதி விவசாயிகளுக்கு ஏற்றவாறு அதிக லாபம் ஈட்டும் உத்திகள், வாழை அடர் நடவு சாகுபடி பற்றி பேராசிரியர் மற்றும் தலைவர் முத்து வேல் (பழத்துறை) விவசாயி களுக்கு விளக்கமாகவும் வயல்வெளி தோட்ட ஆய்வு களின் மூலமாகவும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    3-வது நாளில் உழவியல் துறையின் மூலமாக ஒருங்கி ணைந்த பண்ணையம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை உழவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பரசு ராமன் தலைமையில் இளநிலை வேளாண்மை அலுவலர் கஸ்தூரி ஒருங்கி ணைந்த பண்ணையத்தின் நோக்கம், முக்கியத்துவம், பல்கலைக்கழத்தில் ஒருங்கி ணைந்த பண்ணையத்திற் கான மாதிரி திடல் ஆகியவை பற்றி விவசாயி களுக்கு விரிவாக விளக்கி னார்.

    இம்மாநில அளவிலான பயிற்சியில் விவசாயிகள் ஆர்வமாக பங்குபெற்று அங்கக வேளாண்மையின் தொழில்நுட்பங்களை அறிந்துக் கொண்டு அதனை தத்தம் வயல்களில் செயல் முறைபடுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு நஞ்சில்லா உணவை வழங்க இப்பயிற்சி ஊன்றுகோலாக இருந்தது எனக் கூறினர்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டனர்.

    • முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டி ருந்தார்.

    அடிக்கல் நாட்டுவிழா

    இதையடுத்து முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிகள் நிறைவடைந்து தற்போது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆராய்ச்சியாளர்கள் தகவல்

    இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் கிஷோர் பாஷா, கூடுதல் தலைமை இயக்குநர் குருமீட் சாவ்லா, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    அதில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தகவலை தெரிவித்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனுமதி அளித்துள்ளார். இந்த தகவலை ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    முதுமக்கள் தாழிகள்

    இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் கண்ணாடியின் மேல் இருந்த படியே உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முக்கியமான ஆய்வாளர்கள் அதிகாரிகள் வரும்போது கீழே இறங்கி சென்று பார்க்கும் வண்ணம் இந்த இடத்தில் இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 5-ந் தேதி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற உள்ளதாகவும், முதலில் சி சைட்டிலும், பின்னர் பி சைட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆனிபெருந்திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, பணிவிடை, உகப்படிப்பு நடைபெற்றது.
    • மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அதைத்தொடர்நது ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநலலூர் ஆதிநாராயணர் அய்யா வைண்டரின் செல்வபதியில் ஆனி பெருந்தருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, பணிவிடை, உகப்படிப்பு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தர்மம் நடைபெற்றது.

    9 மணிக்கு ஸ்ரீகுரு சிவசந்திரன் தலைமயில் திருச்சம்பதியில் இருந்து பாற்கடல் பதம் எடுத்து வந்து அய்யா ஸ்தலத்தினை அடைந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு அதை தொடர்நது ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் சந்தனகுடம் சுமந்து வர அய்யா கருட வாகனத்தில் மக்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9 மணிக்கு உண்பான் தர்மம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை செல்வபதி பணிவிடையாளர் ராம்குமார் பரமசிவன், துணை பணிவிடையாளர் பொன்கல்லாண்டன், கணேசன், வெங்கடாலசம், மாரியப்பன், முத்துக்குமார், முருகன் உள்பட ஊர் பணிவிடையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை காவேரி மருத்துவமனை மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பாக செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கலைநன்மணி விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி நன்றி கூறினார். முகாமில், காவேரி மருத்துவமனை மருத்துவர் சிந்துஜா குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அகிலன் முகாமை ஒருங்கிணைத்தார். இந்த முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை, மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வசதி குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    • செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள்.
    • அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை- திருச்செந்தூர் ரெயில் பாதையில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாகும். இந்த நிலையத்தின் அருகில் 2 பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. கருங்குளம் யூனியன் அலுவலகம், சுமார் 42 கிராம மக்கள் கூடும் பாரம்பரிய மிக்க வாரச்சந்தை, தபால் அலுவலகம், கல்வி நிலையங்கள், கால்நடை மருத்துவமனை உள்பட பல அலுவலகங்கள் உள்ளன.

    செய்துங்கநல்லூரை சுற்றி தென்திருப்பதி என கருதப்படும் கருங்குளம் வெங்கடசலாபதி கோவில், தென்சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவில், தென் திருவரங்கம் எனப்படும் ரெங்கராஜ பெருமாள் கோவில், தென் சீர்காழி எனப்படும் கொங்கராயகுறிச்சி கோவில், தென் காசி எனப்படும் முறப்பநாடு சிவன் கோவில், நவலிங்கபுரங்களான வல்லநாடு, கொங்கராயகுறிச்சி, தெற்குகாரசேரி சிவன் கோவில்களும் உள்ளன.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தான் செல்ல வேண்டியது உள்ளது.

    மேலும் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் 3 பிளாட்பார்ம் கொண்டது. இதில் 2 பிளாட்பார்ம் உள்ளது. இங்கு ஒரு நாளில் 3 முறை கிராசிங் ரெயில் நின்று செல்கிறது. ஆனால் 2-வது பிளாட் பார்மில் எந்தவொரு வசதியும் இல்லை. ரெயில் புல் முளைத்து கிடக்கிறது. தெருவிளக்கு இல்லை. குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதியும் உள்ளது. எதிர் பக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு தினமும் பக்தர்களும், மாணவ -மாணவிகளும் வந்து செல்கின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் கிராசிங் நேரத்தில் எதிர் பிளாட்பார்ம் போவதற்கு வசதி இல்லை. எனவே ரெயிலை பல சமயங்களில் விட்டு விடும் நிலை உள்ளது. எனவே ஒரு ஓவர் பிரிட்ச் இருந்தால் மக்கள் எறி மறு பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக இருக்கும்.

    வருங்காலத்தில் தண்டவாளத்தினை உயர்த்த ஏற்பாடு நடைபெற உள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாக மாறி விட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் உள்பட வளர்ந்து வரும் நகரத்தில் இருந்து கூட அவர்கள் நெல்லை சந்திப்பில் ரெயிலில் முன்பதிவு செய்வதை விட, செய்துங்கநல்லூர் சென்று பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இதனால் தினமும் 10 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆகிறது. ஆனால் அடுத்த கட்டமாக அடிப்படை வசதி இன்றி ரெயில் நிலையம் உள்ளது. எதிர்பிளாட்பார்மில் அடிக்கடி கிராசிங் ரெயில் நிற்கிறது. ஆனால் அங்கு விளக்கு வசதி, பிளாட்பார்ம் இல்லாமல் முள் முளைத்து கிடக்கிறது. எனவே இரவில் இறங்கி நிற்கும் போது பாம்பு போன்ற விஷசந்துகள் கிடக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை. முக்கிய ரெயில் நிலையமாக கருதப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பார்மை கடக்க ஓவர் பிரிட்ஜ் அமைத்து தர வேண்டும். தென்னக ரெயில்வேயில் திருச்செந்தூர் ரெயில் பாதை வசூலில் 10 இடத்துக்குள் உள்ளது. அதுபோலவே செய்துங்கநல்லூர் ெரயில் நிலையமும் வசூலில் முன்னணி வகித்து வருகிறது. ஆனால் ஆன்மிகத்தலங்கள் இந்த நிலையத்தினை சுற்றி இருந்தும் கூட, ஆன்மிகத்திற்காக திருச்செந்தூர் - பழனியை இணைக்க உருவாக்கப்பட்ட பாலக்காடு ரெயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்வது இல்லை. எனவே அடிப்படை வசதியை செய்து, பாலக்காடு ரெயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    தற்போது ஒலிபெருக்கி மூலம் ரெயில் வரும் நேரத்தினை அறிவிக்கும் வசதி, மின்சார ரெயிலுக்காக செய்துங்கநல்லூரில் துணை மின் நிலையம் என பல்வேறு வசதி இருந்தும் கூட பாலக்காடு ரெயில் நிற்காமல் செல்வதும், அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது இந்த பகுதி பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாலக்காடு ரெயிலை இந்த கிராசிங் ரெயில் நிலையத்தில் நிறுத்தி, அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

    திருச்செந்தூர் -பழனி ரெயில் ஆரம்ப காலத்தில் செய்துங்கநல்லூரில் நின்று தான் சென்றது. அதன் பிறகு கொரோனா காலத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து ரெயிலும் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் நின்று சென்றது.

    இதற்கிடையில் பழனி ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது செய்துங்கநல்லூரில் இந்த ரெயில் நிற்கவில்லை. எனவேசெய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர்பார்வதி நாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இந்த போராட்டம் முற்றுகை போராட்டமாக உருவெடுத்தது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்களை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போலீசுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வியாபாரிகள் சங்கத்தினர், முஸ்லீம் அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட கலெக்டர் தலையீட்டு செய்துங்கநல்லூரில் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் தொடர்ந்து செய்துங்கநல்லூர் மக்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல், தங்களுடைய போனில் ஸ்டேட்ஸ் வைத்தல் என போராட்டம் நடத்தினர்.

    இந்த வேளையில் மீண்டும் மதுரை ரெயில்வே மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் செய்துங்கநல்லூரில் மக்கள் நலன் கருதி ரெயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் இந்த கடிதம் மதுரை தென்னக ரெயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே விரைவில் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரெயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடுகளை திருடி சென்றனர்.
    • இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் தென்னஞ் சேலை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு தெற்கு காரசேரி பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு அவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடு களை திருடி சென்றனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நாங்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்து என்ற முத்துபாண்டி (வயது28) மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் தலைமையில் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த ஆடு திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்து என்ற முத்துபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து முத்து என்ற முத்துபாண்டியை சிறையில் அடைத்தார்.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்த சப்-இன்க்ஸ்பெக்டர் அல்லி அரசன் மற்றும் போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் புளியங்குளத்தில் நடந்தது.
    • முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் அகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கருங்குளம் அருகேயுள்ள புளியங்குளத்தில் நடந்தது. முகாமினை சமூக ஆர்வலர் சீதன்ராஜ் தொடங்கி வைத்தார். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 13 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் செல்வராணி நன்றி கூறினார். இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், சந்தனமாரி, அரி பாலகிருஷ்ணன் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார்.
    • புதிய கட்டிடத்திற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்டிடம் தர வேண்டும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கடந்த வாரம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு ஆய்வு செய்ய வருகை தந்தார். அவர் அங்குள்ள பழமையான நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார். மேலும் நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்களுக்காக புதிய கட்டிடம் கட்ட பட வேண்டிய இடத்தினை பார்வையிட்டார். அதன் பின் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கிய லீலா, மேலாளர் மகேந்திர பிரபு, செய்துங்கநல்லூர் கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.

    அதன்பின் அதற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை சந்தித்து மக்கள் குறை கேட்டார். கலெக்டருடன் சார் ஆட்சியர் கவுரவ்குமார், நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் சேர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் வந்தனர்.

    ×