search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvapthi"

    • ஆனிபெருந்திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, பணிவிடை, உகப்படிப்பு நடைபெற்றது.
    • மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அதைத்தொடர்நது ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநலலூர் ஆதிநாராயணர் அய்யா வைண்டரின் செல்வபதியில் ஆனி பெருந்தருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, பணிவிடை, உகப்படிப்பு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தர்மம் நடைபெற்றது.

    9 மணிக்கு ஸ்ரீகுரு சிவசந்திரன் தலைமயில் திருச்சம்பதியில் இருந்து பாற்கடல் பதம் எடுத்து வந்து அய்யா ஸ்தலத்தினை அடைந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு அதை தொடர்நது ஏகமகா அன்னதர்மம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் சந்தனகுடம் சுமந்து வர அய்யா கருட வாகனத்தில் மக்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9 மணிக்கு உண்பான் தர்மம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை செல்வபதி பணிவிடையாளர் ராம்குமார் பரமசிவன், துணை பணிவிடையாளர் பொன்கல்லாண்டன், கணேசன், வெங்கடாலசம், மாரியப்பன், முத்துக்குமார், முருகன் உள்பட ஊர் பணிவிடையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×