என் மலர்
நீங்கள் தேடியது "Saudi arabia"
சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளை சேர்ந்தவை போன்ற கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவுதி அரேபியா நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி காலித் அல் பாலிக் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரத்யேக பொருளாதார மண்டலமான புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு எடுத்து செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்.
ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கும் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவுதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார்.
தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. இரவும் பகலும் என்னை சுற்றி ஏராளமான விலங்குகள் உள்ளன. ஒரு ஒட்டகம் இறந்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த பணியாளர் ஒருவர் என்னை சரமாரியாக அடித்து தாக்கினார். எனக்கு உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்கின்றனர். என்னை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வீரய்யாவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். ரியாத்தில் உள்ள தூதரகம் மூலம் வீரய்யாவை மீட்கும் பணி நடந்து வருவதாக நவ்தீப் சூரி பதில் அளித்தார்.
வீரய்யாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்றும் இதையடுத்து வீரய்யாவின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ், விசா ஆவணங்களை தூதரக அதிகாரிகள் கேட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் நவ்தீப் சூரி தெரிவித்தார்.
வீரய்யா வெளிட்ட வீடியோ சவுதியில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரய்யாவின் பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் செல்கிறது. இந்த பகுதி ஜோர்தான் எல்லையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
வளைகுடா- தெலுங்கானா பொது நல மற்றும் கலாசார கூட்டமைப்பின் தலைவர் பட்குரி பசந்த் ரெட்டி, சவுதி அரேபியாவில் உள்ள தெலுங்கு மக்கள் மூலம் வீரய்யாவின் இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.
தூதரக அதிகாரிகள் குழுவை அனுப்பி வீரய்யாவை கண்டு பிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பசந்த் ரெட்டி கூறினார்.
வீரய்யாவின் தாயார் கடந்த மார்ச் 30-ந்தேதி இறந்துபோனார். அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு கூட வீரய்யாவை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள்.
தற்போது அவரது இருப்பிடத்தை கண்டு பிடித்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயல்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes #37executed #37terroristsexecuted
வாஷிங்டன்:
ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது.
அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.
இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்தது. இக்கெடு மே 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.
ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 65 டாலராக உள்ளது. அது 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது.
இது இந்தியாவின் அனைத்து பொருளாதார நிலைகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதன் தாக்கம் தற்போதே தொடங்கிவிட்டது. நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்துவிட்டது.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DonaldTrump #SaudiArabia



வாஷிங்டன்:
சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்.
துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சவுதிஅரேபியா தூதரகத்துக்கு சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.
தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த கொலைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவும் கண்டித்தது.
சவுதிஅரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் தூண்டுதலால் தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹசோக்கி கொலை இளவரசர் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுசம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது. அந்த நாட்டுடன் எப்போதுமே நாங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். எங்கள் இரு நாடுகளின் உறவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
ஹசோக்கி கொலையால் சவுதிஅரேபியாவுடன் உள்ள உறவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Journalistsmurder #trump
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

சவுதி அரேபியாவும் அடுத்த மாதத்துக்குள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut