search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowdfund"

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுதி அரேபியாவில் கேரள வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • கேரளத்தைச் சேர்ந்த இந்தியரை மீட்க நிவாரண நிதி அளிப்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம் முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்தார்.

    இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதற்கிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.

    இதுதொடர்பாக அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கேரளாவை குறிவைத்து இடைவிடாத வெறுப்பு பிரசாரங்களை எதிர்கொள்வதில் மலையாளிகளின் அடங்காத ஆவி பிரகாசிக்கிறது. கேரளாவின் பின்னடைவு மற்றும் இரக்கத்தை ஒன்றாக நிலைநிறுத்துகிறது.

    சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் கதை இந்த எதிர்ப்பைக் குறிக்கிறது. அவரது விடுதலைக்காக 34 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி. ஐக்கியம், இரக்கம் மற்றும் உண்மையின் உண்மையான கேரளக் கதையை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    ×