search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள வாலிபர்"

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுதி அரேபியாவில் கேரள வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • கேரளத்தைச் சேர்ந்த இந்தியரை மீட்க நிவாரண நிதி அளிப்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம் முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்தார்.

    இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதற்கிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.

    இதுதொடர்பாக அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கேரளாவை குறிவைத்து இடைவிடாத வெறுப்பு பிரசாரங்களை எதிர்கொள்வதில் மலையாளிகளின் அடங்காத ஆவி பிரகாசிக்கிறது. கேரளாவின் பின்னடைவு மற்றும் இரக்கத்தை ஒன்றாக நிலைநிறுத்துகிறது.

    சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் கதை இந்த எதிர்ப்பைக் குறிக்கிறது. அவரது விடுதலைக்காக 34 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி. ஐக்கியம், இரக்கம் மற்றும் உண்மையின் உண்மையான கேரளக் கதையை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    திருவனந்தபுரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.

    இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.
    • 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து மெக்காவை அடைந்தார்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர் (வயது 29). இவர் நடந்தே மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 2-ந்தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.

    இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஷிஹாப் சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார். கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன் பிறகு முஸ்லிம்களின் புனிதத் தலமான மதீனாவுக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கி இருந்தார்.

    அதன்பிறகு மெக்காவுக்கு புறப்பட்டார். மதீனாவிற்கும் மெக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ. தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார். மெக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்தார்.

    இதன்மூலம் மெக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலில் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.

    • களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியில் உள்ள ஒருவரின் போலி முகவரியை கொடுத்து மர்ம நபர்கள் ஆன்லைனில் 3 விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேமராவை ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்டர் செய்த கேமரா மற்றும் செல்போன்கள் ஆகியவை மார்த்தாண்டத்தில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரியர் நிறுவன ஊழியர் அஜித் ஆன்லைனில் ஆர்டர் செய்த 2 வாலிபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பொருட்களுடன் அவர்களது முகவரிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் அஜித்திடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கொரியர் நிறுவன பார்சலை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.

    இதையடுத்து இன்னொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரை பகுதியை சேர்ந்த அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கேரளாவிற்கு சென்று அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களை விற்பனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் கேமராவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-திருப்பூர் இடையே ரெயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சேலம்-திருப்பூர் இடையே ரெயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பெட்டியில் பயணம் செய்த திருப்பூர் குட்டிக்காட்டு புரம் பரம்பில் ஹவுஸ் பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 21) என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தினார்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் சிங். இவரது வீட்டின் அருகில் வயதான தம்பதியர் வசித்து வருகின்றனர்.

    நேற்று அந்த தம்பதியர் வீட்டுக்கு இரு சக்கர வாகன த்தில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் முதிய தம்ப தியரிடம் லோன் வாங்கி தரு வதாக கூறி உள்ளார்.மேலும் அதற்கு முதலில் முன் பணம் கட்ட வேண்டும் என்றும் அந்த நபர் கூறி உள்ளார்.

    ஆனால் முதிய தம்பதி யினர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் அந்த நபர் முதிய தம்பதியிடம் பணம் பறிக்க முயன்று உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்ச லிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலிபர் அங்கி ருந்து ஒட்டம் பிடித்தார்.

    இதற்கிடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோயல் சிங் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ரசல் ராஜ் ஆலய பங்கு தந்தை உள்ளிட்டோர் வாலிபரை துரத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோயல் சிங்கை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த ஜோயல் சிங் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் கைப்பற்றி பார்த்தனர்.

    இதில் தப்பி ஒடிய வாலிபர் கேரள மாநிலம் காஞ்சிராங்குளம் பகுதியை சேர்ந்த சிபு நாயர் என தெரிய வந்தது. அவர் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×