search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hajj pilgrims"

    • இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது.
    • வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

    ரியாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

    வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது. அவர்களை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். #HajjPilgrims
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரது கடமைகளில் ஒன்றாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான முதல் குழு டெல்லியில் இருந்து இன்று கிளம்பியது. அவர்களை மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் டெல்லியின் போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் சவுத்ரி மெஹ்பூப் அலி கைஸெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    இந்த வருட யாத்திரைக்கு டெல்லியில் இருந்து இன்று 1200 யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். இந்த குழுவில் டெல்லி மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த வருடம் 1,75,025 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாகவும், சுமார் 47 சதவிகித பெண்கள் எவருடைய துணையும் இன்றி இந்த வருடம் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #HajjPilgrims
    ×