search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிபியா வெள்ளம்"

    • டேனியல் புயல் காரணமாக அணை உடைந்து வெள்ளம் நகருக்குள் புகுந்தது
    • 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது

    வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடு லிபியா. இந்நாட்டில் செப்டம்பர் 10 அன்று டேனியல் எனும் புயல் தாக்கியதில் அங்குள்ள முக்கிய அணைகள் உடைந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் லிபியாவின் வெள்ளப்பெருக்கு குறித்தும் உயிர்சேதம் குறித்தும் ஒரு குறுஞ்செய்தியும் உடன் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆய்வில், இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ, 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது எடுக்கப்பட்டது. இதனை லிபியா வெள்ள சேதத்துடன் இணைத்து செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது.
    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    லிபியா நாட்டை டேனியல் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின.

    டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    இதற்கிடையே, லிபியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மேலும், 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லிபியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நின்று எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    ×