search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "recover"

    • கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

    முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.

    காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான 463 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது தென்காசியில் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான 463 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    அதில், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது தென்காசி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பங்கேற்று உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். 

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது
    • சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது. இது தொடர்பாக சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்தரப்பு மேல்முறையீடு காலமும் முடிவுற்ற நிலையில் மேற்படி வழக்கு நடந்து வந்த இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில், தென்காசி நிலம் எடுப்பு தாசில்தார், செயல் அலுவலர்கள் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முருகன், கடையம் வில்வநாதன் சுவாமி கோவில் அசோக்குமார், வி.கே.புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் முருகன், கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணசுவாமி கோவில் கார்த்திக் லட்சுமி, ஆய்வாளர்கள் தென்காசி சரவணகுமார், ஆலங்குளம் சேதுராமன், சிவகிரி ஆர்.கே.நாச்சியார் கட்டளை நிர்வாக அலுவலர் ஜெகநாதன், கணக்கர் குமார், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், வி.ஏ.ஓ. அன்புச்செல்வி, தலையாரி முத்துசாமி, சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிவகிரி அளவையாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விஜயமல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். தற்போது லண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #vijaymallya

    லண்டன்:

    கர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

    அங்கு ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதை 2005-ம் ஆண்டு அவர்கள் வாங்கினார்கள்.

    2012-ம் ஆண்டு இந்த வீட்டை சுவிஸ் வங்கியான யு.பி.எஸ். வங்கியில் அடமானம் வைத்து ரூ.160 கோடி கடன் பெற்றனர். 5 ஆண்டுகளில் அதை இதை திருப்பி செலுத்துவதாக நிபந்தனையுடன் கடன் வாங்கினார்கள். ஆனால் பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை.

    எனவே வீட்டை கைப்பற்றும் வகையில் சுவிஸ் வங்கி இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ராயல் கோர்ட்டில் நீதிபதி மாஸ்டர்மாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.

    நேற்று இதன் விசாரணை நடந்தது. அப்போது விஜய மல்லையாவின் வக்கீல்கள் வங்கி எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. வீட்டை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார்கள்.

    ஏற்கனவே கோர்ட்டு வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதிக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை வங்கியிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் வாதாடினார்கள். அதையும் நீதிபதி ஏற்கவில்லை.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்துவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த கடன் நடைமுறையில் விஜய மல்லையா நிறுவனம் பல விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

    வழக்கு செலவுக்காக குறிப்பிட்ட பணம் தர வேண்டும் என்று வங்கி கேட்டிருந்தது. அதன்படி 88 ஆயிரம் பவுண்டு பணத்தை (இந்திய பணம் மதிப்பு ரூ.80 லட்சம்) வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

    வழக்கு விசாரணையின் போக்கு விஜயமல்லையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விஜய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுள்ள வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அடகு வைத்த நகையை மீட்டு தராததால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் பெண்ணை தாக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது42). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த தேவி என்பவரிடம் தங்கநகையை கடனாக வாங்கி அடகு வைத்தார். ஆனால் அதன்பிறகு சாந்தி அந்த நகையை மீட்டுதரவில்லை. பலமுறை தேவி நகையை மீட்டு தர கேட்டும் சாந்தி காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சாந்தி கம்பன் கலையரங்கம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது தேவி மற்றும் அவரது கணவர் கர்ணன் ஆகியோர் சாந்தியிடம் நகையை மீட்டு தருவது தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது சாந்தி 4 மாதம் அவகாசம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தேவியும், அவரது கணவர் கர்ணனும் நகையை உடனடியாக மீட்டு தரும்படி கேட்டனர். இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் கைப்பிடியால் சாந்தியின் முகத்தில் குத்தினார். இதில் சாந்திக்கு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதைபார்த்ததும் கணவன்- மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சாந்தி பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கர்ணன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் 35 வயதுடைய பெண் அவசர அவசரமாக ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் நடுவில் சிக்கிய அந்த பெண்ணை 11-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனா விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.

    இந்த செயல் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனாவை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர். 
    மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
    பூந்தமல்லி:

    மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

    இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

    காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்ககோரி அவரது பெற்றோர்கள் தேனி நேருசிலை முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி அருகில் உள்ள பண்ணைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). இவரது மனைவி அன்னக்கொடி(40). இவர்களுக்கு பிரியங்கா(17) என்ற மகளும், செல்வராஜ்(16) என்ற மகனும் உள்ளனர். பிரியங்கா பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று ராஜாவும், அவரது மனைவியும் வீரபாண்டியில் நடந்த தங்களது உறவினர் வீட்டு வீசே‌ஷத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மகள் பிரியங்கா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். தங்களது புகாரில் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுமார் என்ற வாலிபர் கடத்திச்சென்றிருக்ககூடும் என தெரிவித்திருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மகள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் வேதனையில் இருந்த ராஜா, அன்னக்கொடி, மகன் செல்வராஜ் ஆகியோர் இன்று தேனி நேருசிலை அருகே வந்தனர். திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தேனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவர்களிடம் தங்கள் மகளை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



    ×