search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Kovind"

    மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். எம்பிக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 



    இந்த சந்திப்புக்குப் பின் மோடி பேசுகையில், “ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். அதனை ஏற்று புதிய அரசு அமைக்கும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதுவரை காபந்து பிரதமராக என்னை நியமித்துள்ளார். விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்க உள்ளேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும். ” என்றார்.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர். #JallianwalaBagh #PMModi
    புதுடெல்லி:

    1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

    பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.  இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளார்.

    “100 ஆண்டுகளுக்கு முன், நமது சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாலியன் வாலாபாக்கில் உயிர்த்தியாகம் செய்தனர். அது ஒரு கொடூரமான படுகொலை, மனித நாகரிகத்தின் மீது படிந்த ஒரு கறை. அந்த தியாகத் தினத்தை ஒருபோதும் மறக்க முடியாது. உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என ஜனாதிபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



    ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #JallianwalaBagh #PMModi
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 10-ம் தேதி முதல் 5 நாட்கள் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #IndianPresident #RamNathKovind #PresidentVisit
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 10-ம் தேதி மியான்மர் செல்கிறார். மியான்மரில் 14-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நட்டின் அதிபர் வின் மியின்ட் மற்றும் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.



    இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், மியான்மருடனான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்ய உள்ளார்.

    கடந்த 3 ஆண்டுகளில் இரு நாடுகளின் தலைவர்களும் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகள் வலுவடைந்துள்ளது. ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களின் கூட்டுப் பயிற்சியும் நடைபெற்றுள்ளது. #IndianPresident #RamNathKovind #PresidentVisit

    தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். #NewCEC #ChiefElectionCommissioner
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய  தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.



    ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஓய்வு பெற்றதையடுத்து, தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது, அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக விளங்கினார் அரோரா. 2005 முதல் 2008 வரை வசுந்தராவின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #NewCEC #ChiefElectionCommissioner
    ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது. #AAP #PresidentKovind #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு ஆதாயம் பெறும் இரட்டை பதவிகளை வகித்து வரும் அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.



    இந்த மனுக்களை அவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். அவற்றை பரிசீலித்த தேர்தல் கமிஷன், அந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி நிராகரித்தது. பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் தேர்தல் கமிஷன் சில பரிந்துரைகளை வழங்கியது.

    இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கான உத்தரவில் அவர் சமீபத்தில் கையெழுத்து போட்டார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது.

    முன்னதாக நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்ததும், அதை ஐகோர்ட்டு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. 
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார். #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் நேற்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

    ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே மற்றும் மாநிலங்களவை எம்.பி. சாம்சேர் சிங் மன்ஹாஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்று இருக்கிறார்கள்.



    தஜிகிஸ்தான் போய்ச்சேர்ந்த ஜனாதிபதிக்கு தலைநகர் துஷன்பேயில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான், பிரதமர் கோஹிர் ரசூல்சோடா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுகுர்ஜோன் சுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைநகர் துஷன்பேயில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நினைவிடங்களில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மாரியாதை செலுத்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் தேசிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு மாணவர்கள் மத்தியில் ‘பிரிவினைவாதத்தை ஒழிப்போம்; நவீன சமுதாயத்தின் சவால்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் தஜிகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Tajikistan #RamNathKovind
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 9-ம் தேதி வரை தஜகிஸ்தான் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானுக்கு அரசுமுறை பயணத்தை நாளை துவங்க உள்ளார். நாளை முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் அந்நாட்டு தஜகிஸ்தான் ஜனாதிபதி எமாமோலி ரஹ்மோன், பாராளுமன்ற சபாநாயகர் ஷுகுர்ஜோன் ஜுஹுரோவ், மற்றும் அந்நாட்டு பிரதமர் கோஹிர் ரசுல்ஜோடா ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தஜகிஸ்தான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் நவீன சமூகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடமும் சந்தித்துபேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன், லோக் சபா உறுப்பினரான சுபாஸ் பம்ரே மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான ஷம்ஷெர் சிங் ஆகியோர் உடன் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan  #RamNathKovind
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind
    பூட்டான் நாட்டின் ராஜமாதாவும் தற்போதைய மன்னரின் தாயாருமான டோர்ஜி வாங்மோ இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    புதுடெல்லி:

    பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளை ஜிக்மே சிங்யே வாங்சுக் திருமணம் செய்து கொண்டார்.

    1972-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மன்னராக இருந்த இவர் தனது மூத்த மகனான ஜிக்மே கேஷர் நாம்கியெல் வாங்சுக் பதவிக்கு வர வேண்டும் என விரும்பி கடந்த 2006-ம் ஆண்டில் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பூட்டானின் அண்டைநாடான இந்தியாவுடன் அந்நாட்டுக்கு உள்ள 25 ஆண்டுகால நட்புறவை விளக்கும் வகையில் இந்தியாவில் ‘பூட்டான் வாரம்’ கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை இந்திய மக்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் பூட்டான் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்-கின் முதல் மனைவியும், தற்போதைய மன்னரின் தாயாரும், அந்நாட்டின் ராஜமாதாவுமான கியாலியும் டோர்ஜி வாங்மோ வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் இந்தியா வந்துள்ள எம்.பி.க்கள் குழு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்துள்ளனர். #Srilanka #India
    புதுடெல்லி:

    இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் உள்பட 11 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். டெல்லியில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து அவர்கள் பேசினர்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பேசப்பட்டது. 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


    மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கியூபா சென்றடைந்தார். அங்கு பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். #PresidentKovind
    ஹவானா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

    இதனை அடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 
    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    புதுடெல்லி:

    ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
    ×