search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவுதினம்"

    • பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    அரியலூர்

    திராவிட கழக தலைவர் பெரியார், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆர், ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாநில பொறுப்பாளர் தனக்கோடி மருதவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், நகரச் செயலாளர் கூத்தாண்டம் கார்த்திக் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அமைப்புச் செயலாளர் கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராமஜெயவேல் தலைமையில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




    ×