search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pamphlets"

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய மக்காத தன்மை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உள்ளூர் வெடி மருந்து தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் வெடி வெடிக்கும்படியும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், மெயின் ரோடு மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பேக்கரி, பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களுக்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புகையில்லாத மற்றும் பிளாஸ்டிக் இல்லாத தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக உறுதிமொழி மற்றும் கையெழுத்து முகாமினை சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்து நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், கோமதி அம்பாள் மெட்ரிக்பள்ளி, பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது.
    • தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    காங்கயம் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அரசு மருத்துவமனை, காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    துண்டுபிரசுரத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது, சமை–யல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது, சமையல் முடிநதவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கியாசை பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடிவிட வேண்டும்.

    வீட்டினுள் கியாஸ் கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுககளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்கக்கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணியவேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக்கூடாது. மக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்ப நிலையில் அணைக்க தீத்தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

    இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்ககளை வினியோகித்தனர்.மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் நடத்தப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுறுத்திலின் பேரில்  மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகள், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் முதுநகரில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் குற்ற பிரிவு சப் -இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ரவி மற்றும் போலீசார் வெளியூருக்கு செல்லும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோடை காலம் என்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும் படியாக யாரையாவது பார்த்தால் வாகன பதிவு எண்களை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீடு கடை மற்றும் அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க செல்லும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் குறியீடு எண்களை தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மூலமும் முக்கிய சாலைகளில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
    • ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக விளங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் குணசேகரன், ரவிக்குமார், கவின்மிகு தஞ்சை இயக்கம் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்தியா ரெட் கிராஸ் துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர்களுக்கு அறிவுரை
    • துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பெண் குழந்தைகள் வன்புணர்வு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் சமூக பாதுகாவலர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் பற்றியும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கமளித்தார்.

    அதேபோல், பெற்றோர்களும் பெண் பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொண்டு நாள்தோறும் அவர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்ளவது மிகவும் அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
    • மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே தி.மு.க. சாா்பில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா்கள் காா்மேகம், பிரவீன் தங்கம் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமை யில் கிளை செயலா ளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி அரண்மனை முன்பு நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி முன்னிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.

    பின்னர் ராமநாதபுரம் அரண்மணை பகுதியில் இருந்த கடைகளை அடைக்கும்படி வியாபாரிகளிடம் தி.மு.க.-காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அங்கு வந்த போலீசார் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட வக்கில் பிரிவு தலைவர் அன்பு செழியன், மண்டபம் வட்டார காங்கிரஸ் தலைவர் மேகநாதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×