search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
    X

    காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் பஸ் நிலைய பகுதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

    தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    • தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது.
    • தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    காங்கயம் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அரசு மருத்துவமனை, காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    துண்டுபிரசுரத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது, சமை–யல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது, சமையல் முடிநதவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கியாசை பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடிவிட வேண்டும்.

    வீட்டினுள் கியாஸ் கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுககளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்கக்கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணியவேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக்கூடாது. மக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்ப நிலையில் அணைக்க தீத்தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

    இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்ககளை வினியோகித்தனர்.மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் நடத்தப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    Next Story
    ×