search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palai"

    • பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நெல்லை:

    பாளை மகாராஜா நகர் 20-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்.

    சித்தா டாக்டர்

    இவர் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி திலகவதி (66). இவர் சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    ரூ.30 ஆயிரம் திருட்டு

    இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து விடுப்பில் சென்றதால் வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த சங்கர்( 34) என்பவர் கடந்த 3 நாட்களாக அவரது வீட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர்களது வீட்டில் சம்பவத்தன்று ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    கைது

    இது குறித்து திலகவதி ஐகிரவுண்டு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பணத்தை திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
    • நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜின் மகன் பிரசாத் கண்ணன் (42). இவரும் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நாகராஜனுக்கும், அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத் கண்ணனை கைது செய்தனர்.

    • பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது.
    • இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டியின் தொடக்க விழா நாளை காலை நடக்கிறது.

    இந்த போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு முதல் 2 நிலைகளை பெறுகின்ற அணிகளுக்கு கருவேலம் வெற்றிக் கோப்பைகளும், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் நிர்வாகிகள் முருகேசன், பீர்அலி, டாக்டர் மாரிக்கண்ணன், சார்லஸ், ஜாண்சன், ராதா, மோகன், முனைவர் ஹமர் நிஷா,மங்கை,ஜெயா மற்றும் சிந்தா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மாரி வெங்கடேசன், ரே மண்ட் சிங்க், ஜெய் கணேஷ், மனோகரன், அண்ணா துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செய லாளர் ஆண்ட்ரூஸ் முத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாள ர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில துணை த்தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படை யில் நியாயமான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வை யாளர்களுக்கு அடுத்தகட்ட பணி உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் ஆய்வாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தமிழக முழுவதும் கால்நடை ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்பா ஆலோ சனையின்படி கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் அறிமுக உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ புரொபுல்ஷன் காம்ப்லெஸ் துணை பிரிவு தலைவர் லிபோநா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு களை வழங்கினார். முடிவில் பார்வதி தேவி நன்றி கூறினார். 

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
    • கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பவப்ரியா அம்பா ஆசியுடன், கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திர சேகரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் கமலா தலைமையில் நடந்தது. கணிதவியல் துறை தலைவர் ரேவதி வரவேற்று பேசினார்.

    கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி (சுயநிதி பிரிவு) கணிதவியல் துறையின் தலைவர் முத்துகுமாரி சிறப்புரையாற்றினார். முதுகலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி திவ்யா நன்றி கூறினார்.

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.

    உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

    அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.

    • தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
    • பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமை யில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.

    மகளிர் விடுதிகள்

    இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    மேலும் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.

    முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பாளை வீரமா ணிக்கபுரத்தில் புதுப்பிக்க ப்பட்ட மகளிர் விடுதியை இன்று காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி நெல்லை யில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.

    கலந்து கொண்டவர்கள்

    தொடர்ந்து மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் குத்து விளக்கு ஏற்றினர். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் பொன்மு த்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விடுதியில் சுத்திகரிக்க ப்பட்ட குடிநீர்வசதி, பாதுகாப்பு வசதி, பொழுதுபோக்கு அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்ப ட்டுள்ளது. வீரமாணிக்கபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி ரூ. 45.54 லட்சத்தில் கட்டி முடிக்க ப்பட்டுள்ளது. இவ்விடுதி 60 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    முன்பதிவு

    மேலும் www.tnwwhclin என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்க ளில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பபட்டுள்ளது.

    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:

    ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.

    முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.

    கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.

    பாளையில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை பொதுமக்களே செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட பாளை மனக்காவலம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள திருமலை தெரு, சண்முகம் பிள்ளை தெரு, காமராஜ் நகர் உள்பட ஏராளமான தெருக்களில் கடந்த சில நாட்களாக குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப் படவில்லை.

    மேலும் சாக்கடை வாறுகால் முறையாக தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று 7-வது வார்டு கவுன்சிலர் இந்திரா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் சாக்கடை அள்ளும் பணியை தாமதப்படுத்துவதாக கூறி கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் வாறுகாலில் இறங்கி சாக்கடைகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே முறையாக குப்பைகள் அப்புறப் படுத்தப்படவில்லை. சாக்கடை களை அள்ளு வதற்கு பணியாளர்கள் வருவதில்லை.
     இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இதன் காரணமாக நாங்கள் இன்று சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு ள்ளோம் என்றனர்.

    தகவலறிந்த பாளை போலீசார் மற்றும் பாளை மண்டல சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    உடனடியாக தூய்மைப் பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குப்பை களை அப்புறப்படுத்தும் பணி மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை தொடங்கினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பாளை மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர்.
    நெல்லை:

     நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்டது 32-வது வார்டு. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக இந்த பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

     முன்னதாக அவர்கள் பாளை பஸ் நிலையம் பகுதியில் இருந்து காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், 32-வது வார்டுக்கு உட்பட்ட ஜோதிபுரம் எரிபத்த நாயனார் தெரு, எம்.ஜி.ஆர். காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.

    எனவே உடனடியாக புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். புதுப்பேட்டை வடக்கு தெரு, நடுத்தெரு மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகிறது. 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த வார்டில் உள்ள அனைத்து மினி சின்டெக்ஸ் தொட்டிகளும் பழுதடைந்து கிடக்கிறது. இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு ஜோதிபுரம் மைதானத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று கூறினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ் மற்றும் உதவி கமிஷனர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார் துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ளை பாண்டியன், மண்டல தலைவர்கள் முகமது அனஸ் ராஜா,  மாரியப்பன், ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×