search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary Inspectors Association"

    • தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தென் மண்டல கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று பாளை ஜோதிபுரம் திடலில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் விருதுநகர், கன்னியா குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மாரி வெங்கடேசன், ரே மண்ட் சிங்க், ஜெய் கணேஷ், மனோகரன், அண்ணா துரை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செய லாளர் ஆண்ட்ரூஸ் முத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாள ர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில துணை த்தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படை யில் நியாயமான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வை யாளர்களுக்கு அடுத்தகட்ட பணி உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் ஆய்வாளர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தமிழக முழுவதும் கால்நடை ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    ×