search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam thamizhar katchi"

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
    • புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்...
    • நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அந்தியூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரேயொரு சாதனை சொன்னால் நாங்கள் போட்டியில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.

    * என்ன நடந்திருக்கு எந்த நாட்டில்? ஆட்சி பொறுப்பேற்கும் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார் மோடி. தற்போது 20 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள்.

    * ஒரே ஒரு தடவ பத்திரிகையாளர்களை மோடி சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * எல்லாவற்றிலும் புதுசு தேடும் போது, 75 வருஷமா உதயசூரியன், 60 வருஷமா இரட்டை இல்லை, அதே தாமரை, அதே கை... எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒரே தடவ மைக்கை அழுத்து..

    * எல்லாரும் அவங்க சின்னத்துல நின்னு போட்டியிடுறாங்க. எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்... நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    * இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, என்னுடைய வரியை, வரிவரி என்று வாங்கி குவித்தவர்கள், ஊழல், லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே.
    • இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    திண்டுக்கல்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.

    சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.

    கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.

    தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம்.

    பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.

    அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
    • குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.

    மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.

    வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.

    தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.

    இதில் 25-ந்தேதி மிகவும் நல்லநாள் என்பதால் அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதே போல் தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்றும் தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகம், புதுச்சேரி முழுவதும் நேற்று வரை 780 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வமுடன் பலர் வந்திருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது என்பதால் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேர்தல் அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் அப்போது வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பிறகும் கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இதுவரை 40 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மதியம் 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெறலாம்.

    30-ந்தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒரே சின்னத்தை 2 சுயேட்சைகள் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
    • நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
    • ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஹோலி விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கனவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    இதுபற்றி சீமானே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனித்து போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் இதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்த பிறகும் நாங்கள் கூட்டணி சேரப்போவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சேரப்போவதாக தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள். ஒருவேளை அது போன்ற தகவலை பரப்புபவர்கள் எங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களோ? 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் விரைவில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன். கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதில் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணிகளில் விரைவாக ஈடுபடுவோம்.

    இவ்வாறு சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது.
    • மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-

    கேள்வி:-நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனால் வாக்கு சதவீதம் அதிகரித்து வந்த போதிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளதே? இது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி விடாதா?

    பதில்:- வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதே பெரிய வெற்றிதான். தலைவர், தொண்டர் என தனித்தனியே இருந்தால்தான் நீங்கள் சொல்வது போன்று சோர்வு, சலிப்பு எல்லாம் வரும். நாம் தமிழர் கட்சியில் அனைவருமே லட்சிய உறுதியுடன் புரட்சிகர அரசியலையே முன்னெடுத்துச் செல்கிறோம். 'சுதந்திர பசி கொண்ட மக்களை சோற்றுப்பசி ஒன்றும் செய்யாது' என்று எங்கள் தலைவர் சொல்கிறார்.

    தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை பறிகொடுக்க முடியாது. தோற்கப் போகும் கோட்பாட்டை ஏற்று அதன் வெற்றிக்காக இன்று பாடுபடுவதைவிட என்றாவது ஒருநாள் ஜெயிக்கப்போகும் கோட்பாட்டை ஏற்று அதற்காக போராடி தோற்பதே மேன்மையானது என்கிறார் நேரு. அப்படித்தான் இதனை பார்க்க வேண்டும். அதனால் இங்கு சோர்வு என்பதே கிடையாது. எளிதாக எதுவும் நடந்து விடாது. ஒரே நாளில் மாறுதல் எப்படி நடக்கும். கத்தரிக்காய், வெண்டைக்காயை நீங்கள் பறிக்க வேண்டுமென்றால் கூட விதை போட்டு 3 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

    புரட்சிகர மாறுதல் அரசியலில் எந்த விலையும் கொடுக்காமல் எப்படி வரும். எந்த பின்புலமுமின்றி நாங்கள் வளர்ந்து வருவதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். வாரிசு பின்புலம், கட்சி பின்புலம் எதுவுமின்றி எளிய பிள்ளைகளாகிய நாங்கள் ஒரு அரசியலை முன்னெடுத்து செல்கிறோம். அரசியல் அதிகாரம், பல ஆயிரம் கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கு நடுவே எதுவும் இல்லாமல் வரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதும் வெற்றி தானே. சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாமன்ற உறுப்பினராக செல்வது மட்டுமே வெற்றி கிடையாது. எங்களது லட்சியங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதே வெற்றிதான்.


    கே:- பாரதிய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து கட்சிகளும் கூட்டணி அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- கொள்கையில்லாத அரசியல் பாவம் என்கிறார் காந்தி. அப்படி கொள்கை அரசியலா? கூட்டணி அரசியலா? என்பதை பார்த்தால் கொள்கை அரசியலைத்தானே முன்னெடுக்க வேண்டும். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால், கொலை செய்தால் அது சரியானது என்றாகி விடுமா? அது குற்றம் இல்லையா? மக்களை முழுமையாக நம்பாதவர்கள், நேசிக்காதவர்கள்தான், ஆள்பலம் தேடுவார்கள். தனித்த வீரன், நேர்மையானவன், நான் மக்களை நம்புகிறேன்... நேசிக்கிறேன்.

    அவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஆள் துணை எனக்கு எதற்கு? கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு துணிவு தேவையில்லை. தனித்து நிற்பதற்குத் தான் துணிவு தேவை. அதனால் நாங்கள் அதனை கணக்கிலேயே எடுத்துக் கொள்வது இல்லை. எனவே மக்களை நம்பி தொடர்ந்து தனித்தே களத்தில் நின்று போராடுவேன்.

    கே:- நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதே? அதனை எப்படி அணுகப் போகிறீர்கள்? என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- வேண்டுமென்றே அது செய்யப்பட்டுள்ளது. ஒரு சின்னத்தை பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சதவீத வாக்கு பெற்றிருந்தாலே அந்த கட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கரும்பு விவசாயி சின்னத்தில் 6 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். அவர்கள் சொல்வது போல வரியும் கட்டியுள்ளோம். 7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்போது இரண்டே தொகுதியில் போட்டியிட்டு 71 ஓட்டுகளையே பெற்றவருக்கு எங்கள் சின்னத்தை எப்படி ஒதுக்கினார்கள்? அவருக்கு அவசரம் அவசரமாக சின்னத்தை ஒதுக்கி கொடுத்தது ஏன்?

    எனவே நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்-புதுச்சேரியில் விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வழக்குப் போட்டு உள்ளோம். அதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப்போகிறது? எனபதை பார்க்க வேண்டும். 4 அல்லது 5 நாட்களில் அது தெரிந்து விடும்.

    கே:- தனித்தே போட்டியிடுவது என்கிற முடிவெடுத்துள்ள போதிலும் கூட்டணி பற்றி ரகசிய பேச்சுவார்த்தையில் எங்களோடு கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ளீர்கள்? எதிர்காலத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு உள்ளதா? இல்லை சீமான் தனி வழியிலேயே பயணிப்பாரா?

    ப:- நீங்கள் இப்படித்தான் (தனித்து) என்னை ஏற்க வேண்டும். என்னையென்றால் நான் கொண்டுள்ள தத்துவத்தை நீங்கள் ஏற்க வேண்டும். நான் தமிழ், தமிழர், தமிழ் தேசியத்தை முன்னெடுத்து பேசி வருகிறேன். நான் பேசுகிற அரசியலை எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரா? இல்லையா? இன்று அவர் வைத்திருக்கும் முழக்கம் என்ன? தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாட்டை காப்போம் என்கிறார். இதைத்தானே நான் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்.

    இப்படி எனது அரசியலை ஏற்று உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று என்னோடு பயணிக்க யாராவது வந்தால் அதுபற்றி அப்போது யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் முறைகேடாக ஆட்சி செய்து வழக்குகளை சந்தித்தவர்களுடன் சேர்ந்தால் அவர்கள் மீது இருக்கும் கோபம் எங்கள் மீதும் திரும்ப வாய்ப்பு உள்ளது.

    புதிய ஆற்றல்களாக அமைப்புகள் வந்தால் அவர்களோடு கூட்டணி சேர்ந்து பயணிக்கலாம். அதற்கு நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. மற்றவர்களின் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுபவர்களே மேலானவர்கள். அப்படி இருக்கும்போது மக்களுக்கு முன்பு நான் ஏன் போலியான உருவத்தை காட்ட வேண்டும்.

    நான் இவ்வளவுதான் என்று தனித்து நின்று உண்மையான உருவத்தை காட்டிவிட்டு போய்விட வேண்டியதுதானே? தனித்து நின்றாலும் நாங்கள் தனித்துவத்தோடு நிற்கிறோம். அதனால் நாம் தமிழர் கட்சிதான் பெரிய கட்சி. 40 தொகுதியிலும் நான்தான் தனித்து போட்டியிடுகிறேன்.


    எனக்கு முன்பு விஜயகாந்த் மட்டுமே அப்படி களம் கண்டுள்ளார். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா அதுபோன்று தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்தித்து 37 இடங்களிலும் வெற்றி பெற்றார். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட போகிறோம். எனவே நாங்கள்தான் பெரிய கட்சி. தனித்து நிற்பதற்கு இப்போது யாருக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க சீமானின் நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்தே களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்துக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாகவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.

    இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி சீமான் இந்த கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த மேடையிலேயே சீமான் தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து சீமான் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த வார இறுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த விவசாயி சின்னத்தை வேறு ஒருவருக்கு வேண்டுமென்றே ஒதுக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயி சின்னத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். அதில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துக் கூறி நிச்சயம் விவசாயி சின்னத்தை பெறுவோம்.

    எந்த சூழலிலும் கூட்டணி என்பது கிடையாது. தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×