search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் இருந்து விலக நாம் தமிழர் தயார்... ஆனால் ஒரு கண்டீஷன் போடும் சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தலில் இருந்து விலக நாம் தமிழர் தயார்... ஆனால் ஒரு கண்டீஷன் போடும் சீமான்

    • எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்...
    • நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அந்தியூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    * 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரேயொரு சாதனை சொன்னால் நாங்கள் போட்டியில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * தலா 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.

    * என்ன நடந்திருக்கு எந்த நாட்டில்? ஆட்சி பொறுப்பேற்கும் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார் மோடி. தற்போது 20 கோடி பேர் வேலை இல்லாமல் இருப்பார்கள்.

    * ஒரே ஒரு தடவ பத்திரிகையாளர்களை மோடி சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்.

    * எல்லாவற்றிலும் புதுசு தேடும் போது, 75 வருஷமா உதயசூரியன், 60 வருஷமா இரட்டை இல்லை, அதே தாமரை, அதே கை... எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒரே தடவ மைக்கை அழுத்து..

    * எல்லாரும் அவங்க சின்னத்துல நின்னு போட்டியிடுறாங்க. எனக்கு மட்டும் ஏன் விவசாயி சின்னதை எடுத்தாங்க... பயம்... நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

    * இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, என்னுடைய வரியை, வரிவரி என்று வாங்கி குவித்தவர்கள், ஊழல், லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    Next Story
    ×