search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Airport"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
    • இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்

    கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.

    குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

    மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.

    இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
    • விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.

    மும்பை:

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.

    கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.

    உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.

    • மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும் என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
    • மர்மநபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் மர்மநபர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.

    மேலும், "உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 ஐ வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்" என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 385 (பணம் பறிப்பதற்காக ஒரு நபருக்கு காயம் ஏற்படும் என்ற பயத்தில்) மற்றும் 505 (1) (பி) (அச்சம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அறிக்கைகள்) கீழ் எப்.ஐ.ஆர். (பொது அல்லது பொது அமைதிக்கு எதிராக) அடையாளம் தெரியாத நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
    • விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.

    மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.

    நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.

     

    விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

    இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.

    • மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.
    • 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்.

    சிங்கப்பூரில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த இந்திய குடும்பத்தினரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க துகள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மும்பை சுங்கத்துறை அதிகாரி கூறுகையில், " சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த தம்பதி மற்றும் அவர்களது குழந்தையின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 1,05,27,331 மதிப்புள்ள தங்க துகள் பேக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து பயணித்த இந்தியக் குடும்பத்திடமிருந்து 2 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத் தூளைக் கைப்பற்றினர். தங்கத்தை இரு பயணிகளும் தங்கள் உள்ளாடைகளிலும், அவர்களது 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்" என்றார்.

    முன்னதாக, கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கஸ்டம்ஸ் புலனாய்வுப் பிரிவினர், மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர்.
    • உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.

    மும்பை:

    அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொக்கைனின் மதிப்பு ரூ.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றுச்செல்ல நாவி மும்பை பகுதியின் வாஷி பகுதிக்கு வந்த உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.

    • மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும்.
    • விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிக்காக வரும் மே மாதம் 2ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதாவது, மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் 5 மணிக்கு மேல் வழக்கம் போல் ஓடுபாதைகள் இயங்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

    • பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன.
    • அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.

    மும்பை :

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் வந்து இறங்கினார். அவரது உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணியின் பையில் சந்தேகத்துக்கு இடமாக 2 பெரிய புத்தகங்கள் இருந்தன. அதிகாரிகள் அந்த புத்தகங்களை எடுத்து பார்த்தனர்.

    அப்போது புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையே அமெரிக்க டாலர் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 2 புத்தகங்களிலும் 90 ஆயிரம் அமொிக்க டாலர்களை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.

    கடத்தலுக்கு பல்வேறு நூதன வழிகள் கையாளப்படும் வேளையில், புத்தகங்களில் டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்த மற்றொரு நூதன முயற்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த வெளிநாட்டு பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல மும்பை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சோதனையில் அந்த பயணி உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த 2½ கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசையின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் இடுவாய்மலர் கார்டனை சேர்ந்தவர் கேசவன் (வயது 28) .இவர்கணியாம் பூண்டியில் மருந்துகடை, பணம் பரிவர்த்தனையும்நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு ரூ.8.53 லட்சம் பணத்துடன் தனது மைத்துனர் வெற்றிவேல் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரும் கீழே விழுந்தனர்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் கேசவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.இதுகுறித்து கேசவன் மங்கலம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த வழிப்பறி வழக்கில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரையும் கேரளாவை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழிப்பறி பணத்தில் வாங்கிய காரையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட ரிஜோன் பைல்ஸ் தேசாய் என்பவரை தேடி வந்தனர். இவருக்கு பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதுதெரிந்தது. மேலும் ரிஜோன் பைல்ஸ் தேசாய் வழிப்பறி பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவனை பிடிக்கும் விதமாக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் திருப்பூர் மாவட்ட போலீசாரால் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருந்த ரிஜோன் நேற்று இரவு இந்தியா திரும்பி உள்ளார் .அப்போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். இது தொடர்பான தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவனை திருப்பூர் அழைத்து வர தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இன்று அவரைதிருப்பூர் அழைத்து வந்துவிசாரிக்கும் போது, வேறுஎன்னென்ன குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை விமான நிலையத்தில் போதைபொருள் கடத்திய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Drugs
    சென்னை:

    மும்பை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 40 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சுங்கத்துறை உதவி கமி‌ஷனர் மல்லிகார்ஜுனா தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மும்பை விமான நிலையத்தில் போதைபொருள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க வலை விரித்தனர்.

    பெரம்பூரை சேர்ந்த ஜெய்னுதீன் என்ற வாலிபருக்கு போதைபொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது அம்பலமானது. சென்னை பாரிமுனை பகுதியில் பதுங்கி இருந்த அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பாரிமுனையில் உள்ள வங்கியிலும் சோதனை நடத்தப்பட்டது. லாக்கரில் ஜெய்னு தீன் வைத்திருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் விசாரணைக்காக அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போதைபொருள் கடத்தலில் சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜாபர், சலீம் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். #Drugs
    மும்பை விமான நிலையத்தில் ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. #MumbaiAirport #GoldSeized
    மும்பை:

    மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு தைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் டிராலி பேக்கில் தையலை பிரித்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம் என தெரியவந்தது.

    இந்த தங்க கட்டிகள் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் தீவிரமாக சோதனையிடப்பட்டது. #IndiGO #BombThreat
    மும்பை:

    மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.

    விமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுபற்றி இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வேறு ஒரு தனியார்  விமானத்தில் வந்த பயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார். இதையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தகவல் தெரிவித்த அந்த பயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது” என்றார். #IndiGO #BombThreat
    ×