search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை ஏர்போர்ட்"

    • மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.
    • 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்.

    சிங்கப்பூரில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த இந்திய குடும்பத்தினரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க துகள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மும்பை சுங்கத்துறை அதிகாரி கூறுகையில், " சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த தம்பதி மற்றும் அவர்களது குழந்தையின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 1,05,27,331 மதிப்புள்ள தங்க துகள் பேக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து பயணித்த இந்தியக் குடும்பத்திடமிருந்து 2 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத் தூளைக் கைப்பற்றினர். தங்கத்தை இரு பயணிகளும் தங்கள் உள்ளாடைகளிலும், அவர்களது 3 வயது குழந்தை டயப்பரிலும் மறைத்து வைத்திருந்தனர்" என்றார்.

    முன்னதாக, கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கஸ்டம்ஸ் புலனாய்வுப் பிரிவினர், மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கப் பசையுடன் ஒருவரை கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ×