search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ விமானம்"

    • அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.
    • சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் இருந்தனர். விமானத்தை விமானி இயக்க ஆரம்பித்த போது திடீரென, விமானத்தின் அவசரகால கதவை திறக்கக்கூடிய அலாரம் ஒலித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தினர். மேலும் அவசரகால கதவை திறந்தது யார்?என்பது குறித்து விசாரித்தனர்.

    அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சரோஸ்(27) என்பவர் அவசர கால கதவை திறந்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவசரகால கதவை திறக்க வேண்டும் என்று அதில் இருந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்றார்.

    எனினும் விமானிகள் அவருடைய விளக்கத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சரோசின் விமான பயணத்தை ரத்து செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்த அழைத்து சென்றனர்.

    சென்னையில் ஒரு பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க சரோஸ் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வரும்போது ரெயிலில் வந்த அவர் திரும்பி செல்லும் போது விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தார். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது தெரியாமல் அவசர கால கதவு பட்டனை அழுத்தி தற்போது விசாரணையில் உள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

    • டெல்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது.
    • விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியது.

    இதனால் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக் கொண்டார். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் சில நிமிடம் துர்நாற்றம் வீசியதால் முன் எச்சரிக்கையாக, விமானி மீண்டும் டெல்லியில் தரையிறக்கினார். அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துர்நாற்றம் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானம் திரும்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
    • விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.

    மும்பை:

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.

    கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.

    உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.

    • இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.
    • இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக விமானங்களை இயக்கி வருகிறது.

    இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ விமான கட்டணம் குறிப்பிட்ட கால அளவில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

    200-க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். அதுபோல ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்பி முன் பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது. அந்த விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    • கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது.
    • தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

    ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையில் சமீபத்திய குறைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இண்டிகோ நிறுவனம் கட்டணத்தில் இருந்து எரிபொருள் கட்டணத்தை நீக்கியுள்ளது.

    கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது. தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

    ஏடிஎஃப் விலைகளின் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கட்டணங்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. சர்வேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் 300 முதல் 1000 ரூபாய் வரை குறையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், பயணிகளின் இண்டிகோ விமான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வீடியோவில் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கு விமானி ஒருவர், தமிழில் விதிமுறைகளை கூறும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
    • வீடியோ வைரலாகி 3.45 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள்தான் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கு விமானி ஒருவர், தமிழில் விதிமுறைகளை கூறும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    அந்த வீடியோவில் விமானி பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் கேப்டன் பிரதீப் கிருஷ்ணன். நாம் இன்று மலேசியாவில் இருந்து சென்னை வரை செல்ல உள்ளோம். பயணத்தின் மொத்த தூரம் 2,800 கிலோ மீட்டர். மொத்த நேரம் 3.30 மணி நேரம். எனவே நீங்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார்.

    இந்த வீடியோ வைரலாகி 3.45 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. விமானியின் தமிழ் பேச்சை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை.
    • பாதுகாப்பு கருதி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 9.46 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் 231 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை. இதனை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் பாதுகாப்பு கருதி விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், விமானம் இரவு 10.38 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். 

    • மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான் உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.
    • விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார்.

    அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து திப்ருகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை மந்திரி ராமேஸ்வர் டெலி, திப்துகர் எம்எல்ஏ பிரசாந்த புகான், துலியாஜன் தொகுதி எம்எல்ஏ தெராஸ் கோவல்லா உள்ளிட்ட பலர் பயணம் மேற்கொண்டனர்.

    விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்கத் தொடங்கியபோது, இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து மீண்டும் கவுகாத்தி விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார். விமான நிலையத்தை தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட 12 நிமிடத்தில் விமானம் திரும்பி வந்த நிலையில், பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
    • இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.

    அகமதாபாத்:

    சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.

    உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.

    எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

    • இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார்.
    • விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார்.

    அன்னையர் தினத்தையொட்டி இண்டிகோ விமான நிறுவனத்தால் பகிரப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதில், இண்டிகோ விமான பணிப்பெண் தன்னை நபிரா சம்சி என்று அறிமுகப்படுத்தி கொண்டு தொடங்குகிறார். பின்னர் அதே விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் தனது தாய் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறி அவரை அழைக்கிறார். தொடர்ந்து, தனது தாயார் 6 வருடங்கள் கேபின் குழுவினராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும், அவர் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

    அவருக்கு முன்னால் நானும் ஒரு விமான பணிப்பெண்ணாக நிற்பதில் பெருமை கொள்வதாக கூறி தனது அன்னைக்கு அன்பு முத்தம் கொடுக்கிறார். அப்போது அவரது தாயின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது. நபிரா இந்த அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் ஆரவாரம் செய்து, கை தட்டி பாராட்டுகின்றனர். இந்த வீடியோ அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. ஏராளமானோர் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
    • ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    கொல்கத்தா :

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இதுப்பற்றி அவர் கூறுகையில் "இண்டிகோ இப்போது ஐதராபாத்தில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

    இண்டிகோ விமான நிறுவனம் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கும், வெளிநாடுகளில் 8 நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேப்போல் போதிய பயணிகள் இல்லாததால் இன்று மாலை 4:30 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானம் கோவையில் இருந்து இன்று பகல் 12:45 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம், மாலை 3:15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×