search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight passengers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பனிபொழிவால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது
    • இரவு உணவு கூட கிடைக்காமல் பயணிகள் தவித்துள்ளனர்

    கடந்த நவம்பர் 2023 முதல், வட இந்தியாவில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது.

    குறிப்பாக, தலைநகர் புது டெல்லியில், பனிப்பொழிவின் கடுமை அதிகரித்துள்ளதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய 6E 2195 எனும் விமானம், பனிப்பொழிவின் காரணமாக டெல்லிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க, விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    கோவாவில் இருந்து புறப்படும் போதே இவ்விமானம் அதிக தாமதத்திற்கு உள்ளானதால், பயணிகள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

    மும்பையில் தரையிறக்கப்பட்டதும் அவர்களுக்கு முறையான இரவு உணவு கூட கிடைக்காமல் திண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், சில பயணிகள், விமான நிலைய ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து, அத்துறையின் சார்பில் மும்பை விமான நிலையத்திற்கும், இண்டிகோ விமான அலுவலகத்திற்கும் விளக்கம் தர கோரி, "ஷோ காஸ் நோட்டீஸ்" (showcause notice) அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    இண்டிகோ மற்றும் மும்பை சர்வதேச விமான நிலையங்கள் சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. பயணிகள் இறங்கியவுடன் நிலையத்திற்கு விரைந்து செல்லும் வகையில் விமானத்தை நிறுத்த இடத்தை ஒதுக்காமல், தொலைவில் புதிய இடத்தை நிலையம் வழங்கியது பெரும் தவறு. இதனால் பல பயணிகள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பயணிகளுக்கு இதனால் உணவு விடுதி மற்றும் ஒப்பனை அறைக்கான வசதி உடனடியாக கிடைக்கவில்லை.

    இந்த தவறுகளுக்கு அந்த நோட்டீசில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அவதிக்குள்ளான பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #AirIndia
    கே.கே.நகர்:

    திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 2-30மணிக்கு வந்து மீண்டும் 3.20 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும்.

    இதையடுத்து வழக்கம் போல் இன்று அதிகாலை 2-30மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜா விமானம் வந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 103 பயணிகள், சோதனைக்கு பிறகு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது விமானிகள், விமானத்தை இயக்கி பார்த்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பயணம் செய்ய இருந்த 103 பேரும், திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். இன்று மாலை 5மணிக்கு விமானம் சார்ஜா புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் ஏர் இந்தியா விமானம் மோதி பறந்து சென்றது. அதில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று சார்ஜா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #AirIndia  #TrichyAirport
    ×