search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி வழக்கு"

    • போலீசார் விசாரணை
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    ஆற்காடு:

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 20- ந் தேதி ரத்தினகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சா லையில் சென்று கொண்டிருந்தார்.

    அங்குள்ள தனியார் கல் லூரி எதிரே சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் காட் பாடி தாலுகா இளைய நல் லூர் அடுத்த வாணியகாட்டூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35) இந்த வழக்கில் தலைமறைவானார்.

    அவரை ரத்தினகிரி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேசை ரத்தினகிரி போலீசார் கைது செய்து ஆற்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.
    • அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.

    அவிநாசி:

    அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையை சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் என்ற ராஜா (வயது 42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் என்ற ராஜாவை கைது செய்தனா்.

    • பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் இடுவாய்மலர் கார்டனை சேர்ந்தவர் கேசவன் (வயது 28) .இவர்கணியாம் பூண்டியில் மருந்துகடை, பணம் பரிவர்த்தனையும்நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு ரூ.8.53 லட்சம் பணத்துடன் தனது மைத்துனர் வெற்றிவேல் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாரதி புறம் பிரிவு அருகே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரும் கீழே விழுந்தனர்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் கேசவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.இதுகுறித்து கேசவன் மங்கலம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த வழிப்பறி வழக்கில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரையும் கேரளாவை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வழிப்பறி பணத்தில் வாங்கிய காரையும் பறிமுதல் செய்தனர். வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட ரிஜோன் பைல்ஸ் தேசாய் என்பவரை தேடி வந்தனர். இவருக்கு பல்வேறு வழக்கில் தொடர்பு இருப்பதுதெரிந்தது. மேலும் ரிஜோன் பைல்ஸ் தேசாய் வழிப்பறி பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவனை பிடிக்கும் விதமாக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் திருப்பூர் மாவட்ட போலீசாரால் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருந்த ரிஜோன் நேற்று இரவு இந்தியா திரும்பி உள்ளார் .அப்போது மும்பை விமான நிலையத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். இது தொடர்பான தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவனை திருப்பூர் அழைத்து வர தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். இன்று அவரைதிருப்பூர் அழைத்து வந்துவிசாரிக்கும் போது, வேறுஎன்னென்ன குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    • திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன் என தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம் கிராமத்தில் கல்லாங்காடு தோட்டத்தில் வசித்து வந்த முத்துசாமி மனைவி பாலாமணி(57). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 26 ந்தேதி குடிக்க தண்ணீர் வாங்க தனது தோட்டத்தில் இருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்ற மர்ம நபர் தப்பியோடினார். அவர் அடுத்த சில நாட்களில் கேத்தனூர் வாகன தணிக்கையின் போது பிடிப்பட்டார். அவர் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன்(27) என தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாலாமணியிடம் தங்க செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை பல்லடம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ×