search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maize"

    மக்காச்சோள படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? கலெக்டர் விளக்கம்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 21 ஆயிரம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் இளம்செடி, பூ மற்றும் கதிர் பிடிக்கும் பருவமென பல்வேறு நிலைகளில் உள்ளது. 25 முதல் 35 நாட்கள் உள்ள இளம்செடியில் படைப்புழு வின் தாக்குதல் தென்படுகி றது. படைப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிய ஏக்கருக்கு 5 எண் இனக்க வர்ச்சி பொறி வைத்து, படைப்புழுக்களின் தாக்குத லுக்கு ஏற்ப பூச்சிக்கொல்லி தெளிக்கலாம்.

    முதல் பூச்சிக்கொல்லி தெளிப்பாக விதைத்த 15 முதல் 25 நாளில் அசாடி ரக்டின் 1 சதவீதம், இசி 20 மில்லி அல்லது தயோடிகார்ப் 20 கிராம்அல்லது இமா மெக்டின் பென்சோயேட் 4 கிராம், 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    இரண்டாம் கட்ட தெளிப்பாக, விதைத்த 31 முதல் 45 -வது நாளில் ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் எஸ்இ 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் - 80 கிராம் அல்லது குளோரன் டிரானிலிபுரோல் - 4 மில்லி அல்லது புளுபென்டமைட் - 4 மில்லி அல்லது நோவாலூரான் 15 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துப் பகுதியில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும்.

    அரை ஏக்கருக்கும் குறைவாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட பூச்சிக்கொல்லி யினை 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கலவையை நிரப்பி மூடியின் மேல் பகுதியில் துளையிட்டு குருத்தில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் பயிர் கதிர் பிடிக்கும் பருவத்தில் இருப்பின் டிரோன் மூலமாக மருந்தினை விரைவாக தெளிக்கலாம்

    மேற்கண்ட தொழில்நு ட்பங்களை பயன்படுத்தி படைப்புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார். 

    • இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
    • புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.

    உடுமலை:

    படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. படைப்புழு தாக்குதலால் மகசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. படைப்புழு ஆறு நிலைகளை கொண்டது. இளம்புழுப்பருவம் கருப்புத்தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500 முதல் 2,000 முட்டைகளை குவியலாக இடுகிறது. பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம்புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் குருத்து மற்றும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தக்கூடியது. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி கூறியதாவது:-

    படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். உழவு செய்த பின், கடைசி உழவில், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல் - 19.8 மற்றும் தியோமெத்தாக்சம் - 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடு பயிர், வரப்புப் பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை சாகுபடி செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை நிலத்தில் நிறுவ வேண்டும். பயிரின் 15 முதல் 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமைட் 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். பயிரின் 35 முதல் 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியும், அணி சோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பிறகு எமாமெட்டின் பென்சோயாட் அல்லது நல்லூரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், ஒரு முறை தெளித்த மருந்தை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இரு பருவங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் படைப்புழு தாக்குதல், வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களினால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

    அதிலும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மக்காச்சோளம் சாகுபடி தாமதமானது.

    தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், இறவை மற்றும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் சாகுபடிக்கு வழக்கமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. தற்போது படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நான்கு முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளதால் விதைப்பு முதல் அறுவடை வரை சாகுபடி செலவினம் 35 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை குறைந்தே காணப்படுகிறது.

    தற்போது ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 400 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இந்த விலையும் வரத்து அதிகரிக்கும் போது குறைந்து விடும். இதனால் உடுமலை சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

    கால்நடைகளுக்கு தீவனத்திற்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆதார விலை நிர்ணயித்தல், அரசு கொள்முதல், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
    • வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.

    நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.

    நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

    பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.

    கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.

    வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.

    இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.

    வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

    நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.

    ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

    • உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
    • குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது.

    உங்களுக்கு ஜவ்வரிசி எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? நம்முள் பலருக்கு அதை எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மாவில் இருந்துதான் ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது.

    இதை சபுதானா, சாகோ என்றும் அழைக்கிறார்கள். முற்றிலும் ஸ்டார்சால் நிறைந்துள்ள சவ்ரிசியில் ரசாயனங்கள், செயற்கை இனிப்புகள் போன்ற எதுவும் இல்லாததால் பரவலாக அனைவரும் இதை விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவை தாராளமாக அளிக்கலாம். ஏனென்றால் ஜவ்வரிசி உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் ஒருவருக்குக் கொடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சிப்படுத்துவதிலும் இது பங்குவகிக்கிறது.

    உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது. எனவே ஒருவர் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், ஜவ்வரிசி சிறந்த உணவாக இருக்கும். இதில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்கள் வழியே ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகுப்பதால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கான சிரமத்தை குறைக்கிறது.

    தசை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த மூலமாக ஜவ்வரிசி திகழ்கிறது. இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.

    இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து மூட்டு வலி அபாயத்தை குறைக்கிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால் அவர்களின் எலும்பு பலப்படுகிறது. இதில் எளிய சக்கரை மற்றும் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

    உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடுவதற்கான சிறந்த உணவாக ஜவ்வரிசியை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் அதிக ஆற்றல் இருப்பதால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கப் ஜவ்வரிசியில் 540 கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் 152 மில்லிகிராம் மெக்னீசியம், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 30 மில்லி கிராம் கால்சியம், 16 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதை தவிர புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் சிறிதளவு உள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளை யம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிக்காவில், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், பெரிய சோளி பாளையம், இருக்கூர், ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் தங்க ளது நிலத்தில் மக்காச்சோ ளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிரா கவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்ற னர். சில வியாபாரிகள் மக்காச் சோளக் கதிரை வாங்கி உள்ளூர் பகுதிக ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    அதை வாங்கிய பொது மக்கள் சோளக்கதிரை உப்பு போட்டு வெகவைத்து சாப்பிடுகின்றனர். பல இடங்களில் மக்காச்சோ ளத்தை வாங்கி பாப்கான் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்ற னர். மக்காச் சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் அலைகளுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், அதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலை யில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறை வால் ஒரு கிலோ மக்காச்சோ ளம் ரூ.23 வரை விற்பனை யானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
    • படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.

    படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

    • வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது.
    • உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    பல்லடம்:

    கோழி தீவனத்துக்குப் பயன்படுத்தும் மக்காச்சோளத்துக்கு 1சதவீத செஸ் வரியை ரத்து செய்ய அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பான்மையாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்காச்சோளத்தை விற்பனை செய்யும்போது கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 1சதவீதம் செஸ் வரி கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இந்த வரி விதிப்பு இல்லை.

    இந்த வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே இடுபொருள்கள் விலை உயா்வாலும் கூலி உயா்வாலும் கஷ்டத்தில் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் சிரமத்தையும் கஷ்டத்தையும் இந்த வரி விதிப்பு கொடுக்கிறது.

    விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறையோடு செயலாற்றி வரும் தாங்கள் விவசாயிகளுக்கும், கோழி வளா்ப்பு பண்ணையாளா்களுக்கும் உதவும் வகையில் மேற்கண்ட கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள 1சதவீதம் செஸ் வரியை ரத்து செய்து உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

    • படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். 

    • மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
    • குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.

    தாராபுரம் :

    தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.

    அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

    • கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
    • தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த மானாவரி புஞ்செய் நிலங்களில் பருவமழையை பயன்படுத்தி, வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிரான மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை, ஆண்டு தோறும் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் பகுதியில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது மக்காச்சோள கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரானதால், கதிர்களை அறுவடை செய்து உதிர்த்து, உலர்த்தி பதப்படுத்தி சந்தைப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், தனியார் நிறுவனங்களின் முகவர்களும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளனர்.

    தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது. ஓரிரு வாரங்களில் மக்காச்சோள அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் உடனே விற்பனை செய்யாமல், வெய்யிலில் உலர வைத்து பதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் மக்காச்சோளம் விலை ரூ.2,500 வரை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொன்னாரம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு, விதை கொள்முதல், ஏர் உழுதல், விதைத்தல், களைப்பறித்தல், உரமிடுதல், புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிரடித்து உலர்த்தி பதப்படுத்தல் ஆகியவவற்றுக்கு ஏறக்குறைய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. 25 மூட்டையே மகசூல் கிடைக்கிறது.

    வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வதால், வியாபாரிகளும், முகவர்களும் விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், 4 மாத உழைப்பிற்கு ரூ.20 ஆயிரம் கூட வருவாய் கிடைப்பதில்லை.

    எனவே, அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை உடனே விற்பனை செய்யாமல் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அதில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அறுவடை செய்ய ப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர்கள ங்கள் இல்லாததால் நான்கு வழி சாலையில் உலர்த்தி வருகின்றனர்.

    ×