search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contract"

    • பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன்.
    • ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஸ்பெயினின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற் கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

    நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.

    இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.
    • விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டு தோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் முழுவதும் இருந்து அவர்கள் அங்கு சென்று தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

    இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.

    வெளியுறவு துறை இணை மந்திரி முரளீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரகளுக்கான இணை மந்திரி ஸ்மிருதிஇராணி ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

    சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துறை மந்திரி டாக்டர் தவ்பீக் பின் பஸ்வான் அல் ரபியாவை அவர்கள் சந்திப்பார்கள். விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    • மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது.

    மாலத்தீவு:

    மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக அதிபர் அலுவலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலாளர் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். அவர்களை திரும்ப அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் முகமது மூயிஸ் தொடங்கி உள்ளார்.

    இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலத்தீவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018 வரை அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தார். அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார், அதன் பின்னர் வந்த முகமது கோலி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இந்த சூழ்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக இருப்பார் என கருதப்படுகிறது.

    • காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    சிவகாசி

    திண்டுக்கல்லில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் திண்டுக்கல் பார்வதி கல்லூரி வணிகவி யல் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    பார்வதி கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுரு கன், வணிகவியல் துறை தலைவர் குருசாமி, திண்டுக்கல் கல்லூரி முதல்வர் சுகுமார், வணிகவியல் துறை தலைவர் வனிதா ராணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    இதற்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் பாபு பிராங்க ளின் செய்திருந்தார்.

    • தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.
    • இ-சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    சென்னை:

    அரசு அலுவலகங்களை, மாநில தரவு மையத்துடன் இணைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை டி.சி.எஸ் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இ.சேவை மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

    இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொண்டு நிதி வழங்குகிறது.

    இப்போது இதன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் டி.சி.எஸ்.நிறு வனத்துக்கு மேலும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக டி.சி.எஸ் நிறுவனத்துக்கு அரசு ரூ.12.56 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    • புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்
    • தீபாவளி போனஸ் வழங்க கோரி

    பெரம்பலூர்:

    தீபாவளி போனஸ், மாத சம்பளம் , நிலுவைத் தொகையை உடனே தரக் கோரி பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து இன்று ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் இன்று காலை தங்களுக்கு மாத சம்பளம், தீபாவளி போனஸ் மற்றும் இபிஎப் நிலுவைத் தொகை தராததை கண்டித்து ெபரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில்உள்ள அரியலூர் பஸ் நிறுத்தம் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் திட்டத்தில் வீடுகட்ட காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பிரதம மந்திரி அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறி புரோக்கர்கள் மூலம் காண்ட்ராக்டர்களை வரவழைத்து, ரூ.50 லட்சம் முன்பணம் கட்டுபவர்களுக்கு 1000 வீடுகள் கட்டி தருவதற்கான காண்டிராக்ட் பெற்று தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இதனை நம்பி மதுரை சம்பகுளத்தைச் சேர்ந்த சிவரத்தினம் (வயது 65) என்பவர் 50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி உள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி காண்டிராக்ட் பெற்று தரவில்லை.

    எனவே சிவரத்தினம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது ராஜசேகர் காசோலைகளை கொடுத்து உள்ளார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. சிவரத்தினம் இது தொடர்பாக மதுரை மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
    • அந்தந்த கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், மாணவர்களுக்கான பணிப்பயிற்சி திட்டங்கள் மற்றும் வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் செய்து கொண்டன.

    தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் முன்னிலையில் பதிவாளர் முனைவர் தியாகராஜன், பிஷப் ஹீபர் கல்லுரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன் ஆகியோர் 5 ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் அந்தந்தக் கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

    • பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடக்கிறது எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
    • மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    லீலா வேலு (தி.மு.க): எனது 49-வது வார்டுக்கு உட்பட்ட ஹனிபா காலனி பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் வெள்ளம் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    முத்துச்செல்வம் (தி.மு.க.): எனது வார்டிலும் பாதாள சாக்கடை பணிகள் சீராக நடக்கவில்லை. பெரிய கம்பனி என்று சொல்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் மழை காலம் வந்து விடும். அப்போது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே இந்த காண்டிராக்டை ரத்து செய்ய வேண்டும்.

    ராமதாஸ் (தி.மு.க.): என்னுடைய கல்யாண சுந்தரம் நகரில் மூன்று வருடங்களாக பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது.

    மேயர் அன்பழகன்: பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்த எல் அண்ட் டி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிகள் தொய்வாக நடக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.15 கோடி பின் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 247 கிலோ 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை மூன்றாவது கட்டப் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அந்த நிறுவனத்துக்கு கூறியிருக்கிறோம். உடனடியாக காண்டிராக்ட் கேன்சல் செய்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும்.

    சுஜாதா (காங்கிரஸ்): நான் முதல் கூட்டத்திலேயே எனது வார்டில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரம் ஒரு முறையாவது டாக்டர்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேயர்: தற்போது ஒரு டாக்டரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் நான்கு டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் முப்பத்தி ஆறு புதிய சுகாதார நிலையங்களை திறக்க போகின்றோம். அதற்கு சுகாதாரத் துறை மூலமாக டாக்டர், நர்சிங், உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்.

    கவிதா செல்வம் (தி.மு.க.): எனது வார்டுக்கு உட்பட்ட ராக்போர்ட் பகுதியில் மக்களுக்கு பாதாள சாக்கடை மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பைப் லைன் போட முடியவில்லை. அங்கு இருக்கக்கூடிய 200 சதுர அடி நிலம் ராணுவத்துக்கு சொந்தமாக இருக்கிறது. அதனை கையகப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேயர்: அரிஸ்டோ மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவது போல இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரபாகரன் (விடுதலை சிறுத்தை கட்சி): இரட்டை வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே கருத்தை கவுன்சிலர் மதிவாணனும் வலியுறுத்தினார்.

    திமுக கவுன்சிலர் ஜெ. கலைச்செல்வி

    எனது வார்டில் முன்பு 102 தூய்மை பணியாளர்கள் இருந்தார்கள். இப்போது 34 தூய்மை பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் அதிகம் குப்பைகள் தேங்கி விடுகிறது.

    பைஸ் அகமது மனிதநேய மக்கள் கட்சி

    எனது வார்டில் குடிநீர் குழாயும் கழிவுநீர் குழாயும் ஒரே மட்டத்தில் பதிக்கப்பட்டுள்ளது இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.இது பற்றி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    செந்தில்நாதன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்;-

    திருச்சி மாநகராட்சி வரவு செலவு திட்டத்தை இதுவரை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவில்லை.

    சுரேஷ்குமார் சிபிஐ  

    மாநகராட்சி கூட்டத்தில் பிரதான அரசியல் கட்சி கவுன்சிலர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். நாய் கருத்தடை மையங்களில் அரசு கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    • நெய்வேலியில் ரூ.4,400 கோடி மதிப்பில் பழுப்பு நிலக்கரியில் மெத்தனால் உற்பத்தி ஆலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
    • அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது.

    கடலூர்:

    பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திரவத்தை பழுப்பு நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதற்கான ஆய்வுப் பணிகளை, எள்எல்சி இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கானஆய்வு அறிக்கைக்கு அந்நிறு–வனத்தின் இயக்குனர் குழுவால் ஒப்புதல் வழங்கப்ப–ட்டுள்ளது.

    அதன் அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. நாட்டில் முதல் முறை சுரங்கம் மற்றும் மின்னுற்பத்தி பணிகள் மட்டுமின்றி. பல்வேறு துறைகளில் தனது வர்த்த–கத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற நோக்க–த்தில், என்.எல்.சி. இந்தியா அமைக்கப்படவிருக்கும் புதிய முயற்சியாகும். வரும் 2027-ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.

    மேலாளண்மைப் பணிகள்இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கான மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள, ETCHETEUA இந்தியா நிறுவனத்திற்கு ஆலோச னைகள் வழங்கும் பொருட்டு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமை–ச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தை. என்எல்சி. இந்தியா நிறுவனம் பணி யமர்த்தியுள்ளது.

    நிதிஆயோக்பரிந்துரை மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிதி ஆயோக் அமைப்பு. இத்திட்டத்தினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து திருப்தியடைந்து, மிக விரைவாக இதனை நிறைவேற்றப் பரிந்துரைத்து–ள்ளது குறிப்பிடத்தக்கது. ஊக்கத்தொகைஇத் திட்டத்தினை, உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களுக்கான பட்டியலில் இணைக்குமாறு, என்.எல்.சி. இந்தியா நிறு–வனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    அதன்படி இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் மெத்தனால் திரவத்திற்கு டன்னிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைமத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகாசியில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

    சிவகாசி

    பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப அய்வு கழகம் (நீரி) அமைப்பிடம் பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவந்தனர்.

    இந்த நிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனாராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தி யாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.நான்கரை கோடியை சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.நான்கரை கோடியை நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயண கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×