search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ் பயணம்"

    • ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
    • வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.

    ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.

    ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.

    ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.
    • விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டு தோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் முழுவதும் இருந்து அவர்கள் அங்கு சென்று தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

    இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.

    வெளியுறவு துறை இணை மந்திரி முரளீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரகளுக்கான இணை மந்திரி ஸ்மிருதிஇராணி ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

    சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துறை மந்திரி டாக்டர் தவ்பீக் பின் பஸ்வான் அல் ரபியாவை அவர்கள் சந்திப்பார்கள். விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    • கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
    • வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது.

    சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹஜ்-2024-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முறை 4-ந் தேதி ஆன்லைனில் தொடங்கி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.

    ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.

    கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.

    வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31.01.2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.

    ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://www.hajcommittee.gov.in/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகுதியுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
    • திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு சென்னை புறப்பாட்டுத் தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.

    அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நஜிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு. ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் முழு பெண் ஹஜ் விமானம் புறப்பட்டது.
    • கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டது.

    டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் யாத்ரீகர்கள் பயணித்தனர்.

    இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க முழுக்க பெண் குழுவினர் ஈடுபட்டுனர். இது இந்திய ஹஜ் கமிட்டியின் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்தது.

    முதல் முழு பெண் ஹஜ் விமானம் IX 3025, கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டாவை வந்தடைந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது.

    விமானத்தில், விமானி கனிகா மெஹ்ரா மற்றும் முதல் அதிகாரி கரிமா பாசி ஆகியோருடன் கேபின் குழு உறுப்பினர்களான பிஜிதா எம்பி, ஸ்ரீலட்சுமி, சுஷ்மா சர்மா மற்றும் சுபாங்கி பிஸ்வாஸ் ஆகியோர் இருந்தனர்.

    இதைத்தவிர, விமானத்தின் உள்ளே மட்டுமல்லாமல் விமானத்திற்கான தரை செயல்பாடுகள் மற்றும் விமான பராமரிப்பு பணிகளும் பெண் பணியாளர்களால் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

      சென்னை:

      சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ஜூன் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தினமும் இரு விமானங்கள், ஜூன் 11-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள்.

      நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      • இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக 1.4 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
      • ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே மாதம் 21-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

      புதுடெல்லி:

      இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும். ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டு இருந்தது.

      45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்ரம்) இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

      சென்னை உள்பட 25 விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

      இந்நிலையில் ஆண் துணையின்றி 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.

      இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலமாக 1.4 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் மொத்தம் 65,600 பெண்கள் யாத்ரீகர்கள் ஆவார்கள்.

      60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களில் 15,753 பெண்களும், 81 முதல் 90 வயதுக்குட்பட்டவர்களில் 222 பெண்களும், 91 முதல் 100 வயதுக்குட்பட்டவர்களில் 7 பெண்களும் உள்ளனர். 2 பெண்களுக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது.

      45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண் துணை இல்லாமல் 4,313 பெண்கள் புனித ஹஜ் பயணம் மேற் கொள்கிறார்கள். 25 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அவர்கள் செல்கிறார்கள்.

      இதில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கிருந்து 2,807 பெண்கள் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 195 பேர் பயணமாகிறார்கள். உத்தரபிரதேசத்தில் இருந்து 222 பேரும், மராட்டியத்தில் இருந்து 162 பேரும் புனித பயணம் மேற் கொள்கிறார்கள்.

      ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே மாதம் 21-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

      • புனித ஹஜ் பயணிகள் ‘ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது.
      • கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

      சென்னை:

      தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      புனித ஹஜ் பயணிகள் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வருகிற 20-ந்தேதி வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. இந்திய ஹஜ் குழு இணையதளத்தின் (www.hajcommittee.gov.in) வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCoI' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

      இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 3.2.2024 வரையில் செல்லத்தக்க எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் காசோலை நகல் அல்லது ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
      • விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

      சென்னை:

      தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் ''HCoI'' செயலியை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யலாம். விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப்படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.

      விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத்தளத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

      ஹஜ் 2023-க்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 10-ந்தேதி ஆகும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • ஹஜ் புனித பயணம் செல்ல பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10-ல் இருந்து 25 ஆக உயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
      • ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

      சென்னை:

      இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      ஹஜ் புனித பயணம் செல்ல பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10-ல் இருந்து 25 ஆக உயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.50 ஆயிரம் மிச்சமாகும்.

      மேலும் வைப்புத்தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 36 கோடி இஸ்லாமியர்கள் பயன் அடைவார்கள்.

      இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
      • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம்.

      புதுடெல்லி:

      இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும்.

      கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படுவது நீக்கப்பட்டது.

      சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

      இந்நிலையில் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.

      ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

      ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும் 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற் கொண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது.

      ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்பம் நடப்பாண்டு இலவசமாக வழங்கப்படும். இதை ஹஜ் கமிட்டி இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களிடம் மட்டும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

      பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்றம்) செல்பவர் இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும்.

      ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம். பயணிகள் உடல் நலம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

      அந்த பரிசோதனை மத்திய அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும்.

      ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

      சென்னை, கண்ணூர், கொச்சி, விஜயவாடா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, அகர்தலா, கோழிகோடு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், ஜெய்ப்பூர், வாரணாசி, அவுரங்காபாத், கோவா, மங்களூர், போபால், இந்தூர், கவுகாத்தி, கயா, ராஞ்சி, ஸ்ரீநகர் ஆகிய 25 விமான நிலையங்களில் இருந்து பயணிகள் புறப்படலாம்.

      அனைத்து மாநிலங்களிலும் இருந்து இயக்குனர் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக செல்லலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறினார்.
      • புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றார்.

      சென்னை:

      சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

      இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அபுபக்கர், புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என தெரிவித்தார்.

      மேலும், ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறினார்.

      ×