search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் இருந்து 4,074 பேர் புனித ஹஜ் பயணம் செல்கிறார்கள்
    X

    தமிழகத்தில் இருந்து 4,074 பேர் புனித ஹஜ் பயணம் செல்கிறார்கள்

      சென்னை:

      சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

      தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ஜூன் 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தினமும் இரு விமானங்கள், ஜூன் 11-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வார்கள்.

      நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

      Next Story
      ×