search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hajj Travel"

    • ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
    • வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.

    ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.

    ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.

    ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம்.

    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படுவது நீக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    இந்நிலையில் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும் 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற் கொண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது.

    ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்பம் நடப்பாண்டு இலவசமாக வழங்கப்படும். இதை ஹஜ் கமிட்டி இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்களிடம் மட்டும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

    பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்றம்) செல்பவர் இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம். பயணிகள் உடல் நலம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

    அந்த பரிசோதனை மத்திய அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும்.

    ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

    சென்னை, கண்ணூர், கொச்சி, விஜயவாடா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, அகர்தலா, கோழிகோடு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், ஜெய்ப்பூர், வாரணாசி, அவுரங்காபாத், கோவா, மங்களூர், போபால், இந்தூர், கவுகாத்தி, கயா, ராஞ்சி, ஸ்ரீநகர் ஆகிய 25 விமான நிலையங்களில் இருந்து பயணிகள் புறப்படலாம்.

    அனைத்து மாநிலங்களிலும் இருந்து இயக்குனர் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    2019-ம் ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள ஹஜ் ஹவுசில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் கலந்து கொண்டு, ஹஜ் பயணம் குறித்த முன்னேற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கினார்.

    மேலும், கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 3,865 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டதாகவும், இந்த ஆண்டு மேலும் அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

    அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மெக்கா முதல் மதினா வரை புல்லட் ரெயில் சேவை தொடங்கி இருக்கும் சவுதி அரேபியா அரசுக்கு இந்த கூட்டத்தில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், ஹஜ் ஹவுசின் 18-வது மாடியில் 100 அடி உயர கம்பத்தில் இந்திய தேசிய கொடியை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபக்கர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். #tamilnews
    ×