என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
- ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
- தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை இந்திய ஹஜ் அசோசியேசன் உறுதி செய்துள்ளது.
எனவே ஹஜ் பயணம் செல்வோர் வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பத்திற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
Next Story






