என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Baahubali"
- கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
- மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வனத்துறையினர் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்தது. இது அங்கு உள்ள விளைநிலங்களை தொடர்ந்து நாசப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் பாகுபலிக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. எனவே அதனை சுற்றி வளைத்து பிடித்து சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.
இந்த நிலையில் பாகுபலி யானை திடீரென அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. எனவே அதனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பாகுபலி யானைக்கு வாயில் இருந்த காயமும் குணமாகி விட்டது. இதனால் அந்த யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சியை வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு இருந்தனர்.
கோவையின் அடர்ந்த காட்டுக்குள் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்த பாகுபலி யானை நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமுகை-மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது. இதனை தற்செயலாக பார்த்த வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.
இந்த நிலையில் பாகுபலி யானை நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மெயின் ரோட்டுக்கு வந்தது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி நடமாட்டம் பற்றிய தகவல் காட்டுத்தீயாக பரவியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி யானை நடமாடி கொண்டு இருந்தது. எனவே அவர்கள் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஊருக்குள் வந்த பாகுபலி யானை பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
- வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது.நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளித்த அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இது பெரும்பாலும் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் பாகுபலி யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாயில் காயம் ஏற்பட்டது. எனவே அதற்கு சிகிச்சை அளிப்பது என கால்நடை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக அந்த யானையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் பாகுபலி சிக்கவில்லை.
இதற்கிடையே யானைக்கு வாயில் இருந்த காயம் தானாகவே சரியாகி விட்டது. எனவே பாகுபலி யானையை பிடிக்க வேண்டாம் என மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர்.
இதனை தொடர்ந்து காட்டுயானை பாகுபலி வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகு அந்த யானையை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் பாகுபலி யானை 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்புக்கு வந்தது. அங்கு இருந்த பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
இதனை தற்செயலாக பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சூப்பர் 👌🏻🙏🏻 #Baahubali2https://t.co/mUneiimuhk
— Baahubali (@BaahubaliMovie) July 15, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்