search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி யானை"

    • பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
    • பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.

    தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் சம்பவத்தன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது.


    இதனை பார்த்து வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது.

    மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
    • வனத்துறையினர் பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை யானை நடமாடி வந்தது.

    இந்த யானை அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வந்தது. ஆனால் இதுவரை மனிதர்கள் எவரையும் அந்த யானை தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை.

    எனினும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக 2 கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். ஆனால் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் பாகுபலி யானை வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாட தொடங்கியது.

    மேலும் யானையின் வாயில் காயம் இருப்பததால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவிக்கவே, வனத்துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் 2 கும்கி யானைகளுடன், பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக யானையை தேடும் பணியை தொடங்கினர்.

    தொடர்ந்து யானையை கண்காணித்த போது, வாயில் ஏற்பட்ட காயம் குணமாகி வந்து தெரிய வரவே சிகிச்சை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்படவில்லை என மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் அறிக்கை வெளியிட்டனர்.

    மேலும் யானையின் நடமாட்டம் குடியிருப்பை ஓட்டிய பகுதிகளுக்குள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படுகிறது.

    நேற்றிரவு பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் ஒருபுறம் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல கம்பீரமாக ரோட்டை கடந்து சென்றது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டுப்பா ளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

    இதனையடுத்து பாகுபலி யானை சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பாகுபலி யானை இன்று காலை மீண்டும் சமயபுரம் ஊருக்குள் சாவகாசமாக உலா வந்தது.

    இரண்டு மாதங்கள் ஆகியும் தனது வழித்தடத்தை மறக்காமல் மீண்டும் அதே பாதையில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் வன ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • வனத்துறையினர் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்தது. இது அங்கு உள்ள விளைநிலங்களை தொடர்ந்து நாசப்படுத்தி வந்தது.

    இந்த நிலையில் பாகுபலிக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. எனவே அதனை சுற்றி வளைத்து பிடித்து சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பாகுபலி யானை திடீரென அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. எனவே அதனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பாகுபலி யானைக்கு வாயில் இருந்த காயமும் குணமாகி விட்டது. இதனால் அந்த யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சியை வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு இருந்தனர்.

    கோவையின் அடர்ந்த காட்டுக்குள் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்த பாகுபலி யானை நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமுகை-மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது. இதனை தற்செயலாக பார்த்த வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.

    இந்த நிலையில் பாகுபலி யானை நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மெயின் ரோட்டுக்கு வந்தது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி நடமாட்டம் பற்றிய தகவல் காட்டுத்தீயாக பரவியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி யானை நடமாடி கொண்டு இருந்தது. எனவே அவர்கள் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.
    • யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குபட்பட்ட சமயபுரம், நெல்லிமலை வனப்பகுதிகளில் நடமாடிய பாகுபலி யானை தற்போது வாயில் காயத்துடன் சுற்றித்திரிகிறது.

    இதையடுத்து வனத்திலுள்ள பாகுபலி காட்டுயானையை கண்காணிக்க கடந்த வாரம் சாடிவயல் வனப்பகுதியில் இருந்த 2 மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.

    இந்த யானைகளின் உதவியுடன் பாகுபலி காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுவினர் வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக பாகுபலி யானையை மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    பாகுபலி யானை இடம் மாறி ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் குன்னூர் ஆறு வரும் வழியில் ஒரே இடத்தில் நின்று 3 மணி நேரம் பலா பழத்தை ருசித்துள்ளது. அந்த இடம் யானையை மீட்க முடியாத அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அதனால் வனத்துறையினரால் நேற்று யானையை மீட்க முடியவில்லை. இன்றும் தொடர்ந்து பாகுபலி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறியதாவது:-

    பாகுபலி காட்டுயானைக்கு வலியின் தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கடந்த வாரம் தாசனூர் பகுதியிலுள்ள கோவில் சுவரை உடைத்து சென்றுள்ளது. இதுவரை பயிர்களை சேதப்படுத்தி வந்தது தற்போது உடைமைகளை சேதப்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

    • யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.
    • சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்று அழைக்கப்படும் பெரிய உருவத்துடன் கூடிய ஒற்றை ஆண் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைவதும், அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றுவதை வனப்பணியாளர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் யானைக்கு காயம் இருந்தால், அதனை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    யானையை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் 2 குழுக்களும் அமைக்கப்பட்டது. இதுதவிர சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டன.

    வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக மோப்பநாய் உதவியுடன், பாகுபலி யானையை கண்காணித்து வருகின்றனர். ஆனால் யானை வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் யானையை பிடிப்பதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரழைக்கப்பட்டன.

    அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யானை வரும் இடங்கள், அது வழக்கமாக செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பாகுபலி யானை தற்போது வேகமாக நகர்கிறது. எனவே எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் அந்த யானை வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் மயக்க ஊசி செலுத்த ஏற்ற இடத்தை ஆய்வு செய்து வருகிறோம்.

    சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். இதற்காக மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த பணிக்கு உதவுவதற்காக 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் யானையை கண்காணித்து வருகிறோம்.

    யானை சரியாக உணவு உட்கொள்கிறதா? தண்ணீர் அருந்துகிறதா? என்பதையும் வீடியோ பதிவு மூலம் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அது இல்லாதபட்சத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.
    • பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இவை அவ்வப்போது, இரை, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டிய ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் மக்களால் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.

    இந்த யானை அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு நுழையும் காட்டு யானை பகல் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சுற்றி திரிந்து தனது பசியினை தீர்த்துக் கொள்கிறது.

    பின்னர் மாலையில் வழக்கம்போல மீண்டும் சமயபுரம் வழியாக சாலையை கடந்து வனத்திற்குள் சென்று விடுகிறது.

    நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரமாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இருப்பினும் பாகுபலி யானை இதுவரை யாருக்கு எந்தவித தொந்தரவு கொடுத்ததும் இல்லை. யாரையும் தாக்கியதும் இல்லை. தற்போது யானையானது மூர்க்கத்தனத்துடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் தாசம்பாளையம் பகுதியில் பாகுபலி யானை சுற்றி திரிந்தது.

    அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.

    பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, மீண்டும் வெளியில் வந்த யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    இந்த காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    தற்போது கோவில் கேட்டை உடைத்து பாகுபலி யானை கோவிலுக்குள் நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போதும் இதே கோரிக்கையை மக்கள் வனத்துறையினருக்கு வைத்துள்ளனர். இதுவரை கண்டுகொள்ளாத வனத்துறையினர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பொதுமக்கள் யானையின் பின் சென்று புகைப்படம் எடுக்கின்றனர்.
    • யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,


    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராள மான யானைகள் உள்ளன. இதில், ஒரு ஆண் யானை மட்டும் கடந்த ஒரு ஆண் டாக மேட்டு ப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகு திகளில் சுற்றி வருகிறது.

    இந்த ஆண் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என்று பெயரிட்டு வருகி ன்றனர். இந்த யானை இதுவரை யாரையும் தொல்லை செய்யவில்லை. விவசாய நிலங்களுக்கு சென்று அதிகமான பயி ர்களை சேதம் செய்வதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக இந்த யானை, நெல்லி மலையில் இருந்து வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, வனத்துறை மர டெப்போ, சிறுமுகை வனப்பகுதி ஆகிய பகுதி களில் சுற்றி வரு கிறது.

    பொதுமக்கள் குடியி ருப்பு பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு தண் ணீர் குடிக்க செல்கிறது. அதே போன்று மேட்டுப் பாளையம் வனப்பகுதி, ஊட்டி சாலையில் இந்த யானை கடந்து செல்கிறது.

    அப்போது பொது மக்கள் யானையின் முன் பும், பின்னுமாக சென்று மொபைல் போனில் புகை ப்படம் எடுக்கின்றனர். சிலர் சத்தமிட்டு விரட்டு கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அமைதி யாக சென்று வந்த இந்த யானை, தற்போது ஆக் ரோஷமாக சென்று வருகிறது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சாலை யிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகிறது. இந்த யானை மிகவும் சாதுவாக உள்ளதால் யாரும் அதை துன்புறுத்தவும், விரட்டவும் வேண்டாம். விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடு பவர்கள் யானைக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.
    • ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதனால் வனத்தில் வசிக்கும் மான், காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.அவ்வாறு வரும் வனவிலங்குகள், அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகிறது.நேற்று இரவு பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.

    அந்த சாலையை கடந்த காட்டு யானைகள் சாலையின் மறுபுறம் உள்ள உணவகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விடலாம் என நினைத்து காட்டு யானைகள், உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முயன்றன. ஆனால் அது முடியாமல் போகவே சிறிது நேரம் அங்கேயே சுற்றிதிரிந்தது. இதனால் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் வனத்துறையினருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் காட்டு யானைகளை அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதன் காரணமாக ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து அதிகமாகவும் காபணப்படும் ஊட்டி சாலையை கடந்த 2 காட்டு யானைகளை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

    இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமீபகாலமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காட்டு யானைகளின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டிடங்கள் தனியார் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.

    இதன் காரணமாக யானைகள் வேறுவழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வனத்துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினால், மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும்.

    இப்படிதான் நேற்று மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. வனத்துறையினரின் முயற்சிக்குப்பின் மற்றொரு பாதை வழியாக காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
    • யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது.

    இன்று காலை முதலில் பாகுபாலி யானையும், அந்த யானையை தொடர்ந்து மற்ற 3 யானைகளும் வந்தன. அந்த யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.

    அந்த சமயம் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×