search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் சுற்றும் பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை
    X

    மேட்டுப்பாளையத்தில் சுற்றும் பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை

    • பொதுமக்கள் யானையின் பின் சென்று புகைப்படம் எடுக்கின்றனர்.
    • யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,


    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராள மான யானைகள் உள்ளன. இதில், ஒரு ஆண் யானை மட்டும் கடந்த ஒரு ஆண் டாக மேட்டு ப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகு திகளில் சுற்றி வருகிறது.

    இந்த ஆண் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என்று பெயரிட்டு வருகி ன்றனர். இந்த யானை இதுவரை யாரையும் தொல்லை செய்யவில்லை. விவசாய நிலங்களுக்கு சென்று அதிகமான பயி ர்களை சேதம் செய்வதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக இந்த யானை, நெல்லி மலையில் இருந்து வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, வனத்துறை மர டெப்போ, சிறுமுகை வனப்பகுதி ஆகிய பகுதி களில் சுற்றி வரு கிறது.

    பொதுமக்கள் குடியி ருப்பு பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு தண் ணீர் குடிக்க செல்கிறது. அதே போன்று மேட்டுப் பாளையம் வனப்பகுதி, ஊட்டி சாலையில் இந்த யானை கடந்து செல்கிறது.

    அப்போது பொது மக்கள் யானையின் முன் பும், பின்னுமாக சென்று மொபைல் போனில் புகை ப்படம் எடுக்கின்றனர். சிலர் சத்தமிட்டு விரட்டு கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அமைதி யாக சென்று வந்த இந்த யானை, தற்போது ஆக் ரோஷமாக சென்று வருகிறது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சாலை யிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகிறது. இந்த யானை மிகவும் சாதுவாக உள்ளதால் யாரும் அதை துன்புறுத்தவும், விரட்டவும் வேண்டாம். விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடு பவர்கள் யானைக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×