search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amma hotel"

    • தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் இணைந்து 66 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளை மேயர் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்ற ஓராண்டினை முன்னிட்டும் 70 ஆயிரம் மரங்கள் நடப்படும் என்று அறிவித்தபடி முதற்கட்டமாக முதற்கட்டமாக 11 ஆயிரம் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தற்போது மேலும் 66 ஆயிரம் மரங்கள் நடும் பணி தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையமும் இணைந்து நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான படிவத்தை வனத்துறை அதிகாரிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கந்தசாமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து செல்வநாயகபுரம் பிரதான சாலை, ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் டி.எம்.பி.காலனி பகுதியில் தொடங்க உள்ள வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி கமிஷனர் தினேஷ் குமாருடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மேயர் மற்றும் கமிஷனர் அங்கு சமைக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், பெயர் முக்கியமல்ல. மக்களின் உணர்வு தான் முக்கியம் என்று பாமரர்களின் பசியை போக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் மாநகராட்சி உணவு கூடங்களில் ஓன்றான தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் தரமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்பொழுது அங்கு இருந்த மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு உணவு வழங்க ஆவண செய்வதாக கூறினார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளை செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது.

    நெல்லை:

    பாளை தெற்கு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி பாளையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமை தாங்கினார். பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் இதற்கான ஏற்படுகளை செய்து இருந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசா ராஜா பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இன்று பொதுச்செயலாளராக தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி உள்ளார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் இப்படி நடக்கும்.

    அ.தி.மு.க. மக்கள் பணி செய்கின்ற இயக்கம். உண்மையான இயக்கம். அ.தி.மு.க.வுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுவதை பார்க்கி ன்றேன். இளைஞர்கள் அ.தி.மு.க.விற்கு வருவதை வரவேற்கிறேன்.

    தாலிக்கு தங்கம், விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா கல்வி உப கரணங்கள் , அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, குடிநீர் என நல்ல திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா வழியில் வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கின்ற எழை எளிய மாணவ- மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்று 7.5 சதவீத உள்ஒதுக்கிடு வழங்கினார்.

    இதன்மூலம் எழை- எளிய மக்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி வருடத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் எந்தவித செலவும் இல்லாமல் மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு பெற வழி செய்தார்.

    இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது. உங்களுக்கெல்லாம் தெரியும் தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயம். பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்களின் விலை எல்லாம் விஷம் போல் ஏறி உள்ளது. இந்த அரசுக்கு ஏன் வாக்களித்தோம் என்பதை மக்கள் நன்கு புரிந்து உள்ளார்கள்.

    நீங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி நல்ல ஒரு பதவிக்கு வருகின்ற வாய்ப்பை பெற வேண்டும். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செய லாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சண்முககுமார், மற்றும் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தச்சை மாதவன், பாளை பகுதி நிர்வாகிகள் அவைத்தலைவர் லெட்சுமணன் முத்துலட்சுமி கற்பகவள்ளி, தாஜுதின், ஆனந்தி, சரவணன், ஆனந்தராஜ், வட்ட செயலாளர்கள் முத்துகுமார், ராசி காதர் மஸ்தன் , ராமர் லட்சுமிநாராயன், அருள் ஜெய்சிங், புதிய முத்து , தச்சை மேற்கு பகுதி துணை செயலாளர் பழநிசுப்பையா, பொருளாளர் கோல்ட் கண்ணன், கிழக்கு பகுதி துணை செயலாளர் சத்யா முருகன் மற்றும் பரமன், நெல்லை மானா, பாளை மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா-கருணாநிதி படங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அப்போது பெயர் பலகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருந்தது. 

    தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெறும் சூழலில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா-கருணாநிதி படங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

    ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

    அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமி‌ஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

    கடலூரில் நேற்று மழை பெய்த நிலையில், அம்மா உணவகத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் உழவர் சந்தை வளாகத்தில் நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த விலையில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உணவை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறைந்த விலை என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்பனையாகி விடும். இதனால் காலதாமதமாக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது.

    இந்நிலையில் இந்த அம்மா உணவக சுற்றுச்சுவர் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுற்றுச்சுவரை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதனால் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில் இருந்தது.

    நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால், மதியம் 2 மணி அளவில் திடீரென அம்மா உணவக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடது புறம் உள்ள சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலை, மாலை நேரங்களில் இந்த சுவரையொட்டி விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரை ஒட்டி பள்ளம் தோண்டியதால் விவசாயிகள் அதன் அருகில் சாலையோரம் வாழைத்தார்களை வைத்து விற்பனை செய்தனர்.

    அதிலும் மதியம் நேரம் என்பதால் அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. ஆனால் அம்மா உணவகத்துக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். சுவர் விழும் நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
    ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகங்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டது. ஆனால் இன்றோ ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #AmmaHotel
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல் அம்மா உணவகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் 200 வார்டுகளிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. காலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ரூ.3-க்கு பொங்கலும் விற்பனை செய்யப்படுகின்றது.

    அதேபோல், மதியம் சாம்பார் சாதம் ரூ.5, கலவை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும், மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மலிவு விலையில் ஏழை- எளிய மக்களின் பசியை போக்கியது மட்டுமில்லாமல், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினையும் அம்மா உணவகம் பெற்றது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்களும், இதர பகுதிகளில் 247 என மொத்தம் 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் குறித்த செய்தியை அறிந்து, எகிப்து நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதி நிதிகளும் வந்து பார்த்து விட்டு வியந்து சென்றனர். அ.தி.மு.க.வின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக அம்மா உணவகம் பேசப்பட்டது.

    அந்த அளவுக்கு நேர்த்தியாக, மலிவு விலையில் தரமான-சுவையான உணவு வழங்கி துடிப்போடு செயல்பட்டு வந்த இந்த அம்மா உணவகங்கள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆதரவற்ற நிலையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது, அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தனர்.

    ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லாதது போல் போய்விட்டது. தரமான, சுவையான உணவுகள் என்று இருந்த நிலை மாறி, சுவை குறைவு, தரமில்லாமை என்ற குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகி, விற்பனை சரிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. முறையாக நிர்வகிக் கும் திறன் இல்லாததே, அம்மா உணவகம் பொலிவு இழந்ததற்கான காரணம் என்று அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாக புகார்களும் வருகின்றன. மேலும், அம்மா உணவகங்களில் தயாராகும் இட்லியை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

    இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அது வெறும் கண்துடைப்பாகவே இருப்பதாகவும் அம்மா உணவக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அம்மா உணவகம் முதலில் இருந்த பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் பழைய பெருமையை தக்க வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கூடுதலாக அம்மா உணவகங்களில் எந்த மாதிரியான உணவு வகைகளை சேர்க்கலாம்?, அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் வருகையை எப்படி அதிகப்படுத்துவது? போன்ற பல்வேறு கருத்துகளை அதிகாரிகள், ஊழியர்கள் தரப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அதை நாங்கள் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதுவரை அம்மா உணவகம் தட்டு தடுமாறி செயல்பட்டு வருகிறது. எப்போது நிற்கும்? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலான நிதி அம்மா உணவகத்துக்கே ஒதுக்கப்படுவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர்கள் கூறினாலும், ஜெயலலிதா தொடங்கி, தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்மா உணவகம் தற்போது ஆதரவற்ற நிலையில் இருப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் பலரும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

    மொத்தத்தில் அம்மா உணவகத்தை மாநகராட்சி நிர்வகித்து வந்தாலும், அரசு இதில் முழுகவனம் செலுத்தி, அவர்களுடன் கைகோர்த்து நடவடிக்கை எடுத்து, அம்மா உணவகத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. #AmmaHotel 
    ×