search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
    X

    மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்த போது எடுத்த படம்.

    பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் 200 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளை செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது.

    நெல்லை:

    பாளை தெற்கு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி பாளையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமை தாங்கினார். பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் இதற்கான ஏற்படுகளை செய்து இருந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசா ராஜா பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இன்று பொதுச்செயலாளராக தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி உள்ளார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் இப்படி நடக்கும்.

    அ.தி.மு.க. மக்கள் பணி செய்கின்ற இயக்கம். உண்மையான இயக்கம். அ.தி.மு.க.வுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுவதை பார்க்கி ன்றேன். இளைஞர்கள் அ.தி.மு.க.விற்கு வருவதை வரவேற்கிறேன்.

    தாலிக்கு தங்கம், விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா கல்வி உப கரணங்கள் , அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, குடிநீர் என நல்ல திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா வழியில் வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கின்ற எழை எளிய மாணவ- மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்று 7.5 சதவீத உள்ஒதுக்கிடு வழங்கினார்.

    இதன்மூலம் எழை- எளிய மக்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி வருடத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் எந்தவித செலவும் இல்லாமல் மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு பெற வழி செய்தார்.

    இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது. உங்களுக்கெல்லாம் தெரியும் தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயம். பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்களின் விலை எல்லாம் விஷம் போல் ஏறி உள்ளது. இந்த அரசுக்கு ஏன் வாக்களித்தோம் என்பதை மக்கள் நன்கு புரிந்து உள்ளார்கள்.

    நீங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி நல்ல ஒரு பதவிக்கு வருகின்ற வாய்ப்பை பெற வேண்டும். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செய லாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சண்முககுமார், மற்றும் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தச்சை மாதவன், பாளை பகுதி நிர்வாகிகள் அவைத்தலைவர் லெட்சுமணன் முத்துலட்சுமி கற்பகவள்ளி, தாஜுதின், ஆனந்தி, சரவணன், ஆனந்தராஜ், வட்ட செயலாளர்கள் முத்துகுமார், ராசி காதர் மஸ்தன் , ராமர் லட்சுமிநாராயன், அருள் ஜெய்சிங், புதிய முத்து , தச்சை மேற்கு பகுதி துணை செயலாளர் பழநிசுப்பையா, பொருளாளர் கோல்ட் கண்ணன், கிழக்கு பகுதி துணை செயலாளர் சத்யா முருகன் மற்றும் பரமன், நெல்லை மானா, பாளை மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×