search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air india flight"

    • இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார்.
    • பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஏர் இந்தியா விமான பயணத்தின் போது உடைந்த இருக்கைகள் மற்றும் குஷன் வசதி இல்லாத இருக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பயணிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் உடைந்த இருக்கை தொடர்பாக பதிவிட்ட பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பயனர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். ஆனால் விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருக்கையை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் தனது பதிவில், ஏப்ரல் 4-ந் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைகக்காக கூடுதலாக ரூ.1,000-ம் செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது பதிவுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் போஸ்ட்டில் சேர்ந்திருந்தார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் தரையிறக்கம்.
    • விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏஐ309 போயிங் விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் மெல்போர்னுக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    போயிங் ட்ரீம்லைனருடன் இயக்கப்பட்ட விமானம் AI309, உடல்நிலை சரியில்லாத பயணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை

    மெல்போர்னில் இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டது.

    டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் மருத்துவ அவசரநிலை காரணமாக மெல்போர்னுக்கு திரும்பியதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்ததது.


    SITA சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 6 மணிநேரம் நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். #AirIndia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏர்இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஐ.டி.ஏ. என்ற சர்வரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இதனால் விமானங்கள் வருகை, புறப்பாடு போன்ற தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஏர்இந்தியா விமான சேவைகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.

    அவர்களிடம் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள், சர்வர் கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    நேரம் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்தது. மும்பை, டெல்லி, விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் காத்து கிடந்தனர்.

    விமானங்கள் எப்போது புறப்படும் என்ற தகவல் தெரியாததால் பொறுமை இழந்த அவர்கள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பயணிகளை போலீசார் சமாதானப்படுத்தினர்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பயணிகள் விமான சேவை பற்றிய அறிவிப்பை சரியாக பெற முடியாததால் தவிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மும்பை, கொச்சி நகரங்களுக்கும், சிங்கப்பூர், கொழும்பு ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கூறும்போது, “காலை 10.30 மணிக்கு பிறகு தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.

    இதேபோல நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளார்கள். இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிநாட்டு விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோகானி கூறும்போது, “ஏர்லைன்சில் பயணிகள் சர்வரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும்” என்று கூறினார்.

    மேலும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஏர் இந்தியா நிறுவனத்தின் எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது தொழில் நுட்ப குழு கோளாறை சரி செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. விரைவில் பழைய நிலைமை திரும்பி விடும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்றார்.



    அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் 9 மணிக்கு சரி செய்தனர். சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    கடந்த ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #AirIndia
    சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 179 பயணிகள் உயிர் தப்பினர். #AirIndiaFlight #StockholmAirport
    ஸ்டாக்கோம்:

    சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர்.

    விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டது. பிறகு அந்த விமானத்தை சற்று வேகமாக விமானி இயக்கினார்.



    அப்போது விமானம் சற்று விலகி ஓட ஆரம்பித்தது. அருகில் இருந்த கட்டிடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதியது. இதனால் விமானம் குலுங்கியது.

    அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் விமானத்தில் இருந்து 179 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.

    விமானம் சற்று தடம் மாறி சென்றதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. உடனடியாக அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வாசல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

    பிறகு பயணிகள் அனைவரும் ஸ்டாக்டோம் விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். அந்த விமானத்தை சுற்றி தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டன.

    விமானம் கட்டிடத்தில் மோதியதற்கு காரணம் என்ன என்பது பற்றி சுவீடன் நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மணி நேரத்திற்கு பிறகு டெல்லி பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.   #AirIndiaFlight  #StockholmAirport
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு டெல்லியில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானங்களில் சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #AIwaives #Gajacyclone #Gajareliefmaterial #Gajavictims
    புதுடெல்லி:

    சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலால் பெரிய பேரிடரை சந்தித்துள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதேபோல், ரெயில்கள் மூலமாக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரெயில்வேதுறை அமைச்சம் சமீபத்தில் அறிவித்திருந்தது.



    இந்நிலையில், டெல்லியில் இருந்து கஜா புயலால் பாதிக்கட்ட தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானங்களில் சரக்கு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு இன்று அறிவித்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை இங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்பார்வையிடுவார்கள் என்றும் சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார். #AIwaives #reliefmaterial #Gajacyclone #Gajareliefmaterial #Gajavictims
    லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் போதையில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்து ரவுடித்தனம் செய்த பெண் கைது செய்யப்பட்டார். #AirIndia
    மும்பை:

    மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

    மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.


    ரவுடி போல் நடந்துகொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மற்றொரு வீடியோவில், பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் என்று அந்த பெண்  கத்துகிறார். #AirIndia
    திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அவதிக்குள்ளான பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #AirIndia
    கே.கே.நகர்:

    திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 2-30மணிக்கு வந்து மீண்டும் 3.20 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும்.

    இதையடுத்து வழக்கம் போல் இன்று அதிகாலை 2-30மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜா விமானம் வந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 103 பயணிகள், சோதனைக்கு பிறகு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது விமானிகள், விமானத்தை இயக்கி பார்த்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பயணம் செய்ய இருந்த 103 பேரும், திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். இன்று மாலை 5மணிக்கு விமானம் சார்ஜா புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் ஏர் இந்தியா விமானம் மோதி பறந்து சென்றது. அதில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று சார்ஜா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #AirIndia  #TrichyAirport
    மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் திடீர் கோளாறு காரணமாக அகமதாபாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #AirIndiaflight #technicalsnag
    அகமதாபாத்:

    மும்பையில் இருந்து அகமதாபாத், லண்டன் வழியாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் நகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் சுமார் 130 பயணிகளுடன் இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    வழியில் அதிகாலை 4.50 மணியளவில்அகமதாபாத் நகரில் தரையிறங்கியபோது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கோளாறு சீர்படுத்தப்பட்ட பின்னர் நாளை காலை 6.35 மணியளவில் அந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பயணிகள் தங்களது இல்லங்களுக்கு திரும்பி விட்டதாகவும், 110 பயணிகள் அகமதாபாத் நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் இன்று மாலை தெரிவித்தனர். #AirIndiaflight #technicalsnag
    திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் ஐஎல்எஸ் ஆண்டனா மீது மோதியதற்கு பைலட்டின் தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #AirIndia
    திருச்சி:

    திருச்சியில் இருந்து துபாய்க்கு நேற்றிரவு 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 130 பயணிகள், பைலட் மற்றும் பணியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 136 பேர் இருந்தனர்.

    விமானம் ஓடு தளத்தில் சிறிது தூரம் சென்று மேலே எழும்பி பறக்க தொடங்கும்போது மிகவும் தாழ்வாக பறந்தது. அப்போது ஓடுதளத்தின் அருகில் இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா (விமானத்தை தரையிறக்க வழிகாட்டும் கருவி) மீது பயங்கரமாக மோதியது. இதனால் விமானம் குலுங்கி நிலை தடுமாறியது.

    என்றாலும் விமானி விமானத்தை உயரே கிளப்ப முயன்றார். அப்போது அந்த விமானம் எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீதும் பயங்கரமாக மோதியது. 

    பயங்கர சத்தத்துடன் மோதியதால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 

    அதேபோல் விமானம் மோதியதில் 50 அடி நீளத்திற்கு விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர்களும் இடிந்து விழுந்தன. விமான நிலைய பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த முள்வேலிகளும் அறுந்து விழுந்தன.

    விமான நிலையத்தின் அலுவலக ஊழியர்கள் துபாய் விமானம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதை கண்காணிப்பு கேமிராவில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தில் இருந்த 130 பயணிகளும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அலறினார்கள்.

    ஆனாலும் பைலட் விமானத்தை நிறுத்தவில்லை. தரை இறக்காமல் தொடர்ந்து விமானத்தை மேலே இயக்கினார்.

    திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு டவர்கள் விமானம் மோதியதில் உடைந்து கிடக்கும் காட்சி.

    டவர்கள் மற்றும் சுவரில் மோதியதால் விமானத்தின் முன்பகுதி, டயர் பகுதி ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சேதத்துடன் விமானம் வானில் பறக்க தொடங்கியது.

    விமானம் குலுங்கியதாலும் விபத்து நடந்ததுபோன்ற சத்தம் கேட்டதாலும் பயணிகள் விமான பணியாளர்களிடம் என்ன நடக்கிறது, ஏன் விமானத்தை நிறுத்தவில்லை, எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூச்சலிட்டனர். ஆனாலும் விமான பணியாளர்களும், பைலட்டும் பயணிகளை சமாதானப்படுத்தினர்.

    விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை, பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என்றும் அவர்களிடம் பைலட் உறுதி கூறினார்.

    இதற்கிடையே துபாய்க்கு புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் துபாய் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும் நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு துபாய் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது பைலட் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால் துபாய் விமான நிலையம் அனுமதி மறுத்துவிட்டது. விமானத்தின் டயர்கள் சேதம் அடைந்திருந்ததால் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என்பதால் துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

    இதை அறிந்த பயணிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்குமா? உயிர் தப்புவோமா? என்று பீதி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே தவிப்பும், பதைபதைப்புமாக இருந்தனர்.

    அவர்களை விமான பணிப்பெண்கள் தொடர்ந்து சமாதானப்படுத்தி வந்தனர். விமானம் மும்பையில் தரை இறங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், எனவே யாரும் பயப்பட தேவையில்லை, எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர்கள் பயணிகளுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

    விமானம் வானில் 3 மணி நேரம் பயணித்த நிலையில் துபாயில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானிலேயே வட்டமடித்து பின்னர் மும்பை நோக்கி பறந்தது. இன்று காலை 6.10 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

    அதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் அனைவரும் துபாய் செல்வதற்கு அங்கு தயாராக மற்றொரு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 130 பயணிகளும் அந்த விமானத்தில் ஏறி துபாய் புறப்பட்டு சென்றனர்.

    இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் ஓடு தளத்தில் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது பைலட்டின் கவனக்குறைவா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    விபத்து நடந்த பகுதிகளை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்த காட்சி.

    விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். விபத்தில் விமான நிலைய ஓடுதளத்தை ஒட்டியுள்ள ஐஎல்எஸ் ஆண்டனா மட்டுமின்றி விளக்குகளும் உடைந்து நொறுங்கியதோடு, ஓடுதளமும் சேதம் அடைந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்து பார்த்தார். மேலும் விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் ப.குமார் எம்.பி., திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோரும் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுதளத்தை விட்டு மேலே எழும்பும்போது ஏன் குறைந்த உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்தது என பைலட்டிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். #AirIndia  
    மாலத்தீவில் தவறான ஓடு தளத்தில் விமானத்தை தரையிறக்கிய 2 விமானிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். #AirIndiaflight #MaleAirport

    மாலே:

    திருவனந்தபுரத்தில் இருந்து மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘ஏ 320 நியோ’ பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.

    அதில், 136-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் மாலே விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது சரியான ஓடு தளத்தில் இறக்கவில்லை.

    மாறாக அங்கு கட்டுமான பணி முடியாமல் இருக்கும் ஓடு தளத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் தாறுமாறாக விமானம் ஓடி விபத்துக்குள்ளானது.

    அப்போது விமானத்தின் 2 டயர்களும் சேதம் அடைந்து அதில் இருந்து காற்று வெளியேறியது. ஆனால் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 136 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் விசாரணை நடத்தியது. அதில் விமானிகளின் தவறே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    அவர்கள் தங்கள் பணியை சரிவரசெய்யவில்லை என கருதி 2 விமானிகளும் பணி நீக்கம்செய்யப்பட்டனர். #AirIndiaflight #MaleAirport

    கேரளாவில் இருந்து மாலத்தீவுக்கு 136 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று மாலை தவறான ஓடுபாதையில் தரையிறங்கியதால் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. #AirIndiaflight #MaleAirport
    மாலி:

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் A320 ரக விமானம் இன்று 136 பயணிகளுடன் மாலத்தீவு தலைநகரான மாலி நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    இன்று மாலை 4.42 மணியளவில் மாலி விமான நிலையத்தை நெருங்கியதும் கீழே இறங்கிய அந்த விமானம் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி, புதிதாக கட்டப்பட்டு வரும் வேறொரு கரடுமுரடான ஓடுபாதையில் இறங்கியது. இதனால், அந்த விமானத்தின் இரு டயர்கள் பஞ்சர் ஆனதை தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    சம்பவ இடத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மாலி விமான நிலயத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தின் பழுதடைந்த டயர்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AirIndiaflight #MaleAirport 
    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், மிதமிஞ்சிய போதையில் பக்கத்து இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #AIFlight #DrunkPassenger
    புதுடெல்லி:

    நியூயார்க்கில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த ஒரு பயணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் தள்ளாடியபடி அங்குமிங்கும் சென்றுள்ளார். பின்னர், ஒரு பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இது அந்த பெண் பயணி மற்றும் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

    இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றி உள்ளனர். விமானம் டெல்லி வந்து சேர்ந்ததும், அந்த பெண் பயணிக்கு நேர்ந்த அவமரியாதை மற்றும் அதிர்ச்சி அனுபவம் குறித்து அவரது மகள் இந்திராணி கோஷ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    ஏர் இந்தியா விமானத்தில் தனது தாய் விமானத்தில் பயணம் செய்தபோது, அவரது இருக்கையில் போதையில் இருந்த ஒரு பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திராணி கோஷ் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை டேக் செய்திருந்தார்.

    இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை இணை மந்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #AIFlight #DrunkPassenger
    ×