search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical emergency"

    • அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தர்வால் தர்மேஷ் குணமடைந்தார்.

    கராச்சி:

    இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. அப்போது பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (வயது 27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து படபடப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு துபாய்க்கு புறப்பட்டது.

    கடந்த மாதம் 23-ந்தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் தரையிறக்கம்.
    • விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏஐ309 போயிங் விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் மெல்போர்னுக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    போயிங் ட்ரீம்லைனருடன் இயக்கப்பட்ட விமானம் AI309, உடல்நிலை சரியில்லாத பயணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை

    மெல்போர்னில் இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டது.

    டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் மருத்துவ அவசரநிலை காரணமாக மெல்போர்னுக்கு திரும்பியதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்ததது.


    • பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • முன்னதாக, போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ விமானம் 6E 2407 ஒன்று நேற்று டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, திடீரென மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதால், டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலுக்கு திருப்பிவிடப்பட்டது.

    இந்நிலையில், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், அந்த அறிக்கையில், " மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் போபாலில் தரையிறக்கப்பட்டதற்கு வருத்தம் தெிரவித்துக் கொள்கிறோம். போபாலில் தரையிறங்கிய பிறகு, விமான நிலையக் குழுவினர், ஒரு நொடி கூட வீணடிக்காமல், விரைவாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவரைப் பாதுகாப்பாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    முந்தைய நாள், கோழிக்கட்டில் இருந்து தம்மம் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படும் போது, விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டத்தில் 22 ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.
    • தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பயன்பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    108 ஆம்புலன்ஸ் நெல்லை மாவட்ட மேலாண்மை அதிகாரி சோமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் 22 ஆம்புலன்ஸ்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 87,579 பேரும், சாலை விபத்துகளில் 76,652 பேரும் தீ விபத்து, மாரடைப்பு, மூச்சுத்திணறல், கோவிட்-19, பாம்புக்கடி, தற்கொலை முயற்சி போன்ற இதர மருத்துவ அவரச தேவைக்காக 2,14,544 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MedicalEmergency #ChennaiAirport
    சென்னை:

    துபாயில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் இன்று காலை தமிழக வான் எல்லையில் பறந்தபோது, அதில் பயணித்த 48 வயது நிரம்பிய பயணி திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.



    இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.

    சென்னை விமான நிலையத்தின் அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த பயணிக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. #MedicalEmergency #ChennaiAirport
    ×