search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலத்தீவில் தவறான ஓடு தளத்தில் விமானத்தை தரையிறக்கி விபத்து - 2 விமானிகள் பணி நீக்கம்
    X

    மாலத்தீவில் தவறான ஓடு தளத்தில் விமானத்தை தரையிறக்கி விபத்து - 2 விமானிகள் பணி நீக்கம்

    மாலத்தீவில் தவறான ஓடு தளத்தில் விமானத்தை தரையிறக்கிய 2 விமானிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். #AirIndiaflight #MaleAirport

    மாலே:

    திருவனந்தபுரத்தில் இருந்து மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘ஏ 320 நியோ’ பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.

    அதில், 136-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் மாலே விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது சரியான ஓடு தளத்தில் இறக்கவில்லை.

    மாறாக அங்கு கட்டுமான பணி முடியாமல் இருக்கும் ஓடு தளத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் தாறுமாறாக விமானம் ஓடி விபத்துக்குள்ளானது.

    அப்போது விமானத்தின் 2 டயர்களும் சேதம் அடைந்து அதில் இருந்து காற்று வெளியேறியது. ஆனால் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 136 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் விசாரணை நடத்தியது. அதில் விமானிகளின் தவறே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    அவர்கள் தங்கள் பணியை சரிவரசெய்யவில்லை என கருதி 2 விமானிகளும் பணி நீக்கம்செய்யப்பட்டனர். #AirIndiaflight #MaleAirport

    Next Story
    ×