என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "15 பேர் பலி"
கிருஷ்ணகிரி சாந்தி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருணோதயம்(வயது 42). அரசு பள்ளி ஆசிரியர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு, கட்டிகானப்பள்ளியில் உள்ள தங்கை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். பிறகு அவர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அருணோதயம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று பதிவாகி இருந்த கைரேகைகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைகள்திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. வியாபாரி. இவரது தாயார் வசந்தி (வயது47) மாரடைப்பால் இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் வசந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்தது. அப்போது வசந்தியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு செயின் உட்பட 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்து எடுக்க வேண்டாம். சுடுகாட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, வசந்தியின் சடலம் ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் பிணத்தை கட்டி பிடித்து கதறி அழுதபடி சிறிது தூரம் சென்றனர்.
கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் பிணத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழட்டினர். பிறகு கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் தங்க செயினை பார்த்த போது காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.
பிணத்தை கட்டிபிடித்து அழுவது போல் நடித்த யாரோ கில்லாடி பெண் 15 பவுன் சவரன் நகைகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை தகனம் செய்தனர்.
இது குறித்து வசந்தாவின் மகன் பிரபு (26) திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா ஒன்றில் உறவினராக வருபவர்கள் கதறி அழுதபடி பிணத்தில் இருந்த நகைகளை லாவகமாக, திருடுவது போன்ற காட்சி இடம் பெறும். அந்த காட்சியை மிஞ்சும் வகையில் இந்த நூதன நகை திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி. பிரிண்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி யோகபிரியா (வயது 25). இந்த தம்பதிக்கு அகிலன் (6), யோகித் (5), பிரணாவ் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 16-ந்தேதி அருள்ஜோதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அருள்ஜோதி மனைவியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகிறார்கள். #Tamilnews
சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார். பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இரவு இந்தோனேசியா சென்றடைந்தார். அவருக்கு அதிபர் சார்பில் உற்றாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று போரில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை வலிப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். பின் இந்தியா-இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.
இந்தோ-பசுபிக் பகுதியில் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு உள்ளது.
இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.
என மோடி கூறினார். #ModiinIndonesia #PMModi
கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #CanadaBlast
கொழும்பு:
இலங்கையில் உள்ள தென் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
குறிப்பாக 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை இந்த காய்ச்சல் தாக்குகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 15 குழந்தைகள் பலியாகி உள்ளன.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளது. பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது, என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நேற்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர்.
மாத்தழை, முலடியானா, அகுரைச, தங்காலை, வலையமுள்ள, காலி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கராபிட்டி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Mysteryfever
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவிலில் நாக சுந்தரம் என்பவரது தென்ன தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கிணறு சுமார் 20 ஆடி ஆழத்தில் இருந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது செடி கொடிகள் மண்டி கிடக்கிறது.
இந்த நிலையில் அப்பகுதி கிராம மக்கள் சிலர், மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக சென்று போது, பழமையான கிணறு அருகே சென்றனர்.
அப்போது கிணற்றில் இருந்து உஸ்.. உஸ்.. என்று சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த கிணற்றின் அருகே போய் பார்த்தனர்.
அப்போது அங்கு சுமார் 6 அடி நீளமுள்ள 2 பாம்புகள் கிணற்றின் சுவர் நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றின் அடியில் பார்த்த போது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள், வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கும்ப கோணம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்து குமார் தலைமையில் வந்த வீரர்களும், வனத்துறை சார்பில் வன காப்பாளர் ஜான்சன் கென்னடி தலைமையில் வீரர்கள் , பொது மக்கள் போராடி பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.
இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பாழடைந்த கிணற்றில் தற்போது 15 பாம்புகள் உள்ளது. குட்டி பாம்புகள்- பெரிய பாம்புகள் என 3 அடி முதல் 8 அடி வரை உள்ளன. இவை அனைத்தும் விஷம் உள்ளவை ஆகும். இவைகளை உடனடியாக இந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சைதாபாத் பகுதியில் மாநில அரசால் நடத்தப்படும் சிறார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 18 வயதிற்கு உள்ள கீழ் தவறு செய்த சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பகத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச்சென்றது சிசிடிவி-யில் பதிவானது. 14-17 வயதுடைய அந்த சிறுவர்கள் இரவில் வெண்டிலேட்டர் துளை வழியாக வெளியே வந்து சுவரில் ஏறி குதித்து சென்றனர். இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனை தப்பிக்க முயன்ற போது போலீசார் பிடித்தனர்.
இதையடுத்து, காப்பகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவை வைத்து சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்