search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15வது நிதி ஆணைய பரிந்துரைக்கு எதிர்ப்பு - ஜனாதிபதியை சந்தித்து 6 மாநில பிரதிநிதிகள் மனு
    X

    15வது நிதி ஆணைய பரிந்துரைக்கு எதிர்ப்பு - ஜனாதிபதியை சந்தித்து 6 மாநில பிரதிநிதிகள் மனு

    மத்திய அரசு 14-வது நிதி ஆணைய பரிந்துரைகளையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் 5 மாநில நிதிமந்திரிகள் மனு அளித்துள்ளனர். #15thFinanceCommision #RamnathKovind
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020ம் ஆண்டோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு 15-வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்படி, அந்தக் குழு கொடுத்துள்ள பரிந்துரைகள் 2020ல் இருந்து 2025ம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 15-வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரையில், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீட்டை வைத்து நிதி ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போதைய மக்கள் தொகையை கொண்டு நிதி ஒதுக்கினால், குறைந்த அளவே நிதி கிடைக்கும் என கூறிய தென்மாநில நிதி மந்திரிகள் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் தமிழக நிதிமந்திரி கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில், 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், நிதி ஒதுக்குவதில் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திரப்பிரதேச நிதி மந்திரி யனமலா ராமா கிருஷ்ணுடு மற்றும் கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் நிதி மந்திரிகள் உள்ளிட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். #15thFinanceCommision #RamnathKovind 
    Next Story
    ×