search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 pound jewelry robbery"

    பொள்ளாச்சியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-கோவை ரோடு சங்கம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தோடு மைசூர் சுற்றுலா சென்றார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஜெயக்குமாரின் உறவினர் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் ஜெயக்குமாருக்கும் தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 48) இவர் கள்ளிக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி திலகவதி மாசவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அழகர் சாமி தன் மனைவியை வழக்கம்போல் பள்ளியில் இறக்கி விட்டு காலையில் வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.

    மாலையில் வீட்டிற்கு வந்த அழகர்சாமி வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மேலும் அனைத்து அறைகளிலும் உள்ள கதவுகளை உடைத்து எலக்ட்ரிக்கல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூரில் கட்டிப்பிடித்து புரண்டு அழுவது போல் நடித்து பெண்ணின் பிணத்தில் இருந்து 15 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. வியாபாரி. இவரது தாயார் வசந்தி (வயது47) மாரடைப்பால் இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் வசந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்தது. அப்போது வசந்தியின் கழுத்தில் இருந்த தாலிச்சரடு செயின் உட்பட 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்து எடுக்க வேண்டாம். சுடுகாட்டில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து, வசந்தியின் சடலம் ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் பிணத்தை கட்டி பிடித்து கதறி அழுதபடி சிறிது தூரம் சென்றனர்.

    கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் பிணத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வசந்தியின் காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கழட்டினர். பிறகு கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் தங்க செயினை பார்த்த போது காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.

    பிணத்தை கட்டிபிடித்து அழுவது போல் நடித்த யாரோ கில்லாடி பெண் 15 பவுன் சவரன் நகைகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை தகனம் செய்தனர்.

    இது குறித்து வசந்தாவின் மகன் பிரபு (26) திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் சினிமா ஒன்றில் உறவினராக வருபவர்கள் கதறி அழுதபடி பிணத்தில் இருந்த நகைகளை லாவகமாக, திருடுவது போன்ற காட்சி இடம் பெறும். அந்த காட்சியை மிஞ்சும் வகையில் இந்த நூதன நகை திருட்டு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×