search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
    X

    தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை

    பொள்ளாச்சியில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-கோவை ரோடு சங்கம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தோடு மைசூர் சுற்றுலா சென்றார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஜெயக்குமாரின் உறவினர் சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் ஜெயக்குமாருக்கும் தகவல் கொடுத்தார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×