என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thirumangalam robbery
நீங்கள் தேடியது "Thirumangalam robbery"
தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 48) இவர் கள்ளிக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி திலகவதி மாசவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அழகர் சாமி தன் மனைவியை வழக்கம்போல் பள்ளியில் இறக்கி விட்டு காலையில் வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்த அழகர்சாமி வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து அறைகளிலும் உள்ள கதவுகளை உடைத்து எலக்ட்ரிக்கல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 48) இவர் கள்ளிக்குடி ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி திலகவதி மாசவநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அழகர் சாமி தன் மனைவியை வழக்கம்போல் பள்ளியில் இறக்கி விட்டு காலையில் வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டார்.
மாலையில் வீட்டிற்கு வந்த அழகர்சாமி வீட்டின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனைத்து அறைகளிலும் உள்ள கதவுகளை உடைத்து எலக்ட்ரிக்கல் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X