என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
- நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் "அன்பான நண்பர்" டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான்.
நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
- திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
- வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.
வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"
என பாடி துதித்தால் வரம் தருவாள்.
வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
- பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
- வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
- சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.
தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.
பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.
அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.
இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.
இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.
1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.
அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.
திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.
எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.
குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.
ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.
இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.
சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.
அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.
இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.
குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.
சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.
"கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.
அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.
- இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
- ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
- MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் இன்று விடைபெற்றன.
விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விம்மன படை தளபதி ஏபி சிங் மற்றும் பிற படைத் தளபதிகள் கலந்துகொண்டனர். விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் கலந்துகொண்டார்.
சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

MiG-21
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.
62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும்.
- விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
- விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர்:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அதற்கு பதிலாக நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் வரும் விஜய் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த புதன்கிழமை லடாக் தலைநகர் லே-வில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது லடாக் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டககாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"6 வருடங்களுக்கு முன்பு லடாக் யூனியன் பிரதேசம் உருவான போது அம்மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்கொண்டது என்னவோ பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே!.
தற்போது, லடாக் மக்களின் நிலமும், வேலைவாய்ப்பு உரிமையும் மிகுந்த ஆபத்தில் உள்ளது. அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம், துணை நிலை ஆளுநர் மற்றும் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டது.
மாநில அந்தஸ்து, அரசியலமைப்பு 6வது பட்டியலில் சேர்க்கப்படுவது, தேர்தல் நடத்தபடுவது ஆகியவை குறித்து லடாக் மக்களின் கோரிக்கைள் குறித்து மீட்டிங் மேல் மீட்டிங் மட்டுமே நடக்கிறதே அன்றி எந்த முன்னேற்றமும் இல்லை.
லடாக்கில் ஏற்கனவே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தங்கள் படைகளை இந்தியா அருகே நிலைநிறுத்தி சீனா ஒருதலைபட்சமாக மீறியதும் அதை பிரதமர் மோடி ஜூன் 19, 2020 இல் பூசி மெழுகியதும் அங்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
லடாக் இந்தியாவுக்கு அதன் கலாச்சாரம், சூழலியல் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. தாங்கள் இந்தியர்கள் என்பதில் லடாக் மக்கள் எப்போதும் பெருமை கொண்டிருந்தனர்.
அவர்களின் கோபமும், துன்பமும் இந்திய அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் வெறும் மீட்டிங் பேச்சுக்களை மட்டுமே மேற்கொள்வதை விட்டு விட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முழு வீச்சில் முடிந்த அளவு விரைவாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூன் 19, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்தக் கூட்டத்தில், "நமது எல்லைக்குள் யாரும் வரவில்லை, நமது ராணுவப் paguthigalaiயாரும் கைப்பற்றவில்லை" என்று பிரதமர் மோடி கூறினார். இதையே பிரதமரின் பூசி மெழுகல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
- பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.
* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.
* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.
* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. அக்டோபர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து பீகார் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதுபோல காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலில் களம் இறங்க உள்ளது.
பீகாரில் ஆட்சியை கைப்பற்ற இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ள நிலையில் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார் மாநில பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சந்தை வழிகாட்டும் உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
இந்த தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்தக்கட்டமாக தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து சமுதாய பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த நிதி உதவி செய்யப்படும். இந்த நிதி உதவியை பெறும் பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுடன் இணைந்து செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.






