என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
- தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
- அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.
'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.
தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.
அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது.
கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் புதிய E லூனா பிரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய E லூனா பிரைம் மாடல் ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் 110 கிலோமீட்டர் மற்றும் 140 கிலோமீட்டர் என இருவித ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய E லூனா பிரைம், பயணிகள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வழக்கமான 100 சிசி மற்றும் 110 சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய E லூனா பிரைம் மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஒற்றை இருக்கை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல விசாலமான பகுதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு நீடித்து உழைக்கும் அதே வேளையில், செயல்திறன் மற்றும் வசதியையும் பராமரிக்கும் வகையில் E லூனா பிரைம் இருக்கும் என்று கைனடிக் கிரீன் கூறுகிறது. இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்ட நிறுவனம், E லூனா பிரைம் மாடல் பரவலாகக் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
- எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
- உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆக இருந்த காலக்கெடுவை அக்டோபர் 31, 2025 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றை காரணம் காட்டி அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
மேலும் தணிக்கை அறிக்கை தாக்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
- நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் "அன்பான நண்பர்" டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான்.
நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
- திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
- வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.
வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"
என பாடி துதித்தால் வரம் தருவாள்.
வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
- பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
- வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார்.
- சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
சிவாஜிராவுக்கு இளம்வயதில் கிடைத்த தோழி பிரபாவதி. இவர் கல்லூரியில் படித்து வந்ததையும் இவர்தான் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கான பயிற்சி வகுப்புகள் 1973-ம் ஆண்டு தொடங்க இருப்பதையும் சிவாஜிராவிடம் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.
தோழி பிரபாவதியுடன் சிவாஜிராவ் கொண்டிருந்த நட்பு மிக மிக ஆத்மார்த்தமானது. வெளியில் யாருக்குமே தெரியாதது. சிவாஜிராவுடன் பஸ்சில் எப்போதும் டிரைவராக பயணித்த ராஜ்பகதூருக்கு கூட அவர்களது நட்பின் ஆழம் தெரியாமலேயே இருந்தது.
பிரபாவதி கல்லூரிக்கு செல்லும்போது சிவாஜிராவ் பணிபுரியும் பஸ்சில் மட்டுமே ஏறுவார். சிவாஜிராவ் செய்யும் ஸ்டைல்களை பார்த்துக் கொண்டே இருப்பார். சிவாஜிராவ் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேகத்தை கண்டு ரசிப்பார். பஸ்சை நிறுத்தவும், பஸ்சை புறப்பட செய்யவும் சிவாஜிராவ் கொடுக்கும் விசில்களை கூட அவர் ரசித்தது உண்டு.
அது மட்டுமல்ல பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்று விட்டு புறப்படும்போது சிவாஜிராவ் ஸ்டைலாக ஓடி வந்து ஏறும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் சிவாஜிராவ் ஸ்டைலாக புகை பிடிப்பதையும் பிரபாவதி கண்கொட்டாமல் பார்த்தது உண்டு. கல்லூரி மாணவியான பிரபாவதி மீது சிவாஜிராவ் இனம்புரியாத பாசத்துடன் பழகி வந்தார். சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு அடிக்கடி பிரபாவதியை நினைத்துப் பார்த்துக் கொள்வார். பெங்களூருக்கு திரும்பி வரும்போதெல்லாம் பிரபாவதியை மீண்டும் பார்த்து விடமாட்டோமா? என்று நினைப்பார். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவரால் பார்க்க முடியாமல் போனது.
இந்த நிலையில்தான் முதல் ஆண்டு வகுப்பு முடிந்து நீண்டநாள் விடுமுறையுடன் பெங்களூருக்கு சிவாஜிராவ் வந்து இருந்தார். எனவே இந்த தடவை எப்படியாவது பிரபாவதியை பார்த்து விடவேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். நண்பரை ஏற்றி பின்னால் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை தேடி சென்றார். பிரபாவதி வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றார். ஆனால் பிரபாவதி குடும்பத்தினர் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர் என்ற தகவல் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. பிரபாவதி எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.
இதனால் சிவாஜிராவ் மிகவும் வேதனைப்பட்டார். தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய தேவதையாக பிரபாவதியை நினைத்தார். அவரை பார்க்க முடியாமல் போனதை நீண்ட நாட்களுக்கு சிவாஜிராவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நாட்கள் செல்ல... செல்லதான் பிரபாவதியின் நினைவுகள் சிவாஜிராவ் மனதில் இருந்து குறைந்தன.
1974-ம் ஆண்டு சிவாஜிராவ் மீண்டும் பெங்களூரில் இருந்து சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்பை தொடங்கினார். இனி பணம் விஷயத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் அவர் படிப்பை தொடங்க ஆரம்பித்தார். அவரிடம் முன்பை விட தன் நடிப்பு மீதான தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது.
அவரது சிந்தனையெல்லாம் நாம் கருப்பாக இருக்கிறோமே எனவே நமக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது. எனவே வில்லன் வேடங்களை கேட்டு வாங்க வேண்டும் என்றே இருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் அவர் அடிக்கடி தன் நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் நான் வில்லனாக நடித்து புகழ் பெறுவேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதற்காகவே அவர் அருண் ஓட்டல் அறையிலும், கல்லூரி வளாகத்தில் இருந்த அறையிலும் கண்ணாடிகளில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் விதவிதமாக ஸ்டைல் செய்து பார்த்துக் கொள்வார். வில்லனாக இருப்பவர்கள் எப்படி ஸ்டைலாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒத்திகை பார்த்தார். இது அவருக்கு நடிப்பில் இருந்த தீராத ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால் அவரிடம் இருந்த ஒரே பலவீனம் நாம் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும்தான். அவரது அந்த எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்து வீசி விட்டு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் திரைப்படக் கல்லூரிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுக்க ஆசிரியராக கோபாலி வந்தார். இவர்தான் திரைப்படக் கல்லூரியில் சிவாஜிராவின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தார்.
திரைப்படக் கல்லூரியில் இவர் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்து இருந்தார். நடிப்பு தொடர்பாக அதிக அனுபவம் இவருக்கு இருந்தது. நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு கலை பற்றிய பயிற்சியை இவர் பெற்று இருந்தார். இதனால் நடிப்பின் நுணுக்கங்கள் இவருக்குள் நிறைந்து இருந்தது.
எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் வகையில் இவரது பயிற்சிகள் இருந்தன. 1974-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் படித்த 36 பேருக்கும் இவரது பயிற்சி வகுப்புகள் மிகவும் கை கொடுத்தன.
குறிப்பாக சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலியின் வகுப்புகள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. இதனால் பேராசிரியர் கோபாலியை சிவாஜிராவ் மிகவும் மரியாதையுடன் பார்த்தார். பேராசிரியர் கோபாலிக்கும் சிவாஜிராவை மிகவும் பிடித்துப் போனது. அதற்கு காரணம் சிவாஜிராவிடம் இருந்த நடிப்பு ஆர்வம்தான்.
ஒரு தடவை பேராசிரியர் கோபாலி நடிப்பு பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தினார். 36 மாணவர்களிடம் உள்ள திறமைகளை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் அந்த தேர்வை வடிவமைத்து இருந்தார். அதன்படி 36 மாணவர்களும் விமானத்தில் செல்கிறீர்கள். திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக 36 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இதை நீங்கள் எப்படி நடித்து காட்டுவீர்கள் என்று தேர்வை வைத்தார்.
இந்த கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு நடித்து காட்டும்படி சொல்லப்பட்டனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்கள். விமானத்தில் பயணம் செய்வதை நடித்து காட்ட பல மாணவர்களும் திணறினார்கள்.
சிவாஜிராவ் முறை வந்தது. அவரை விமானத்துக்குள் இருக்கும் பயணி போல நடித்துக் காட்டும்படி பேராசிரியர் கோபாலி உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே சிவாஜிராவ் விமான பயணியை கற்பனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை அப்படியே நடித்துக் காண்பித்தார். அவரது நடிப்பு பேராசிரியர் கோபாலிக்கு மிகவும் பிடித்துப் போனது.
அடுத்து விமானத்தை ஓட்டுபவராக நடித்து காட்டச் சொன்னார். சிவாஜிராவ் அதையும் நடித்துக் காட்டினார். அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி உயிர் தப்பும் காட்சிகளையும் நடித்து காட்டச் சொன்னார்கள். சிவாஜிராவ் அதையும் துடிப்போடு நடித்து காட்டினார். அவரது யதார்த்தமான நடிப்பில் பேராசிரியர் கோபாலி மனதை பறிகொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அன்று முதல் சிவாஜிராவை பேராசிரியர் கோபாலிக்கும் பிடித்துப் போனது. மற்ற மாணவர்களை விட சிவாஜிராவிடம் கோபாலி அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். குறிப்பாக சிவாஜிராவின் நடிப்பு திறமையை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
பேராசிரியர் கோபாலியை பொறுத்தவரை அவர் மாணவர்களை நடத்திய விதம் வித்தியாசமானது. தன்னை மெத்த படித்தவர் என்ற ரகத்தில் அவர் நடந்துக் கொண்டதே இல்லை. மாணவர்களிடம் நண்பனைப் போலவே பழகினார். மாணவர்களுக்கு அனைத்து விதமான சுதந்திரத்தையும் அவர் கொடுத்து இருந்தார். ஒரு போதும் தனக்கு இருந்த அதிகாரத்தை மாணவர்கள் மீது திணித்ததே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடக்கூட அவர் தயங்கியது இல்லை. இது சிவாஜிராவுக்கு மிக மிக பிடித்துப் போனது. பெங்களூரில் கிடைக்காத புதுமையான ஒரு பாசம் சென்னை திரைப்படக் கல்லூரியில் தனக்கு கிடைத்து இருப்பதாக உணர்ந்தார். எனவே அவர் பேராசிரியர் கோபாலியிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்.
இதனால் சிவாஜிராவை ஒவ்வொரு விஷயத்திலும் பேராசிரியர் கோபாலி திருத்தத் தொடங்கினார். முதலில் அவர் சிவாஜிராவின் உடல் அமைப்பை சுட்டிக்காட்டினார். மெல்லிய கால்கள் அதே சமயத்தில் திடகாத்திரமான உடல் அமைப்பை மேலும் மெருகு ஏற்ற வேண்டும் என்றார். குறிப்பாக அந்த இளம் வயதில் சிவாஜிராவிடம் காணப்பட்ட தொப்பையை பார்த்து கண்டித்தார்.
குறிப்பிட்ட காலத்துக்குள் தொப்பை இல்லாமல் வாட்டசாட்டமான இளைஞராக மாற வேண்டும் என்று ஒரு தந்தையை போல சொல்லிக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு சிவாஜிராவ் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் கோபாலி நிர்ணயித்த நாளுக்கு முன்பே அவர் தொப்பையை முழுமையாக குறைத்து விட்டார். சிவாஜிராவின் உருவ அமைப்பே மாறி இருந்தது.
சிவாஜிராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது நண்பர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் கோபாலி சிவாஜிராவின் பழக்க வழக்கங்களையும் மாற்றினார். மற்றவர்களிடம் பேசும்போது வேகமாக பேசாமல் பொறுமையாக, நிதானமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜிராவிடம் ஒரு பெரிய தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது. நாம் கறுப்பாக இருக்கிறோம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்ற சந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் சிவாஜிராவை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அதற்கும் பேராசிரியர் கோபாலி முற்றுப்புள்ளி வைத்தார்.
"கறுப்பாக இருந்தால் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று சொன்னது யார்? கறுப்புதான் அழகு? கறுப்பு நிறம் என்பது புறக்கணிக்க வேண்டிய விஷயம் அல்ல. நீ தினமும் கண்ணாடி பார்க்கும்போது நம்முடைய கறுப்புதான் அழகு என்று சொல்லிப்பார். அந்த அழகான கறுப்பு நிறத்தில் இருக்கும் மகிமை உனக்கு தெரிய வரும்" என்று தொடங்கி நீண்ட அறிவுரையை சிவாஜிராவிடம் பேராசிரியர் கோபாலி சொன்னார். அவர் சொன்ன இந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் ஆழமாக பதிந்தது.
அடுத்து சிவாஜிராவுக்கு பேராசிரியர் கோபாலி சொன்ன ஒரு அறிவுரை மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. அதுபற்றி நாளை காணலாம்.
- இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
- ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், பிஜூ மேனன், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.
வட இந்தியாவில் துப்பாக்கிகளை தயாரித்து சென்னைக்கு கள்ளத்தனமாக கடத்த வில்லன் முயற்சிக்கிறார். இதுகுறித்து தகவலறியும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இதனை தடுக்கும் முயற்சி எடுக்கிறார்கள். லஞ்சம், ஊழல் மற்றும் சூழ்ச்சியால் தோல்வியை தழுவுகிறார்கள். ஆனால் நேர்மையான அதிகாரியோ, அநியாயத்தை கண்டு பொங்கும் நாயகனை கொண்டு இதனை தடுக்க நினைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் வில்லன் கும்பல் நாயகனின் காதலியை கடத்த அதன்பின்னர் நாயகன் மற்றும் வில்லனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'மதராஸி' திரைப்படம் வருகிற 1-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருகிற 3-ந்தேதி 'மதராஸி' அமேசானில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
- MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் இன்று விடைபெற்றன.
விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விம்மன படை தளபதி ஏபி சிங் மற்றும் பிற படைத் தளபதிகள் கலந்துகொண்டனர். விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் கலந்துகொண்டார்.
சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 11,000க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

MiG-21
1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
இருப்பினும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் MiG-21 விமானத்திற்கு பாதகமாக அமைந்தது.
62 ஆண்டுகளில் MiG-21 சந்தித்த 400 விபத்துகளில் 200 விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான Tejas Mk2 விமானங்கள் இருக்கும்.






