என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 4-ந்தேதி தமிழகம் வருகிறார்
    X

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 4-ந்தேதி தமிழகம் வருகிறார்

    • சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

    வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

    மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×